காதலிப்பதாக தொந்தரவு.. தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வடமாநிலத் தொழிலாளி கைது!
தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை தந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி கடத்திய புகாரில் வடமாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த அலிமுதீன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். இவர் மங்கட்டாய் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை முனாப் அலியம் கூலித் தொழில் செய்து வருகிறார்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
உள்ளூரில் போதிய வேலை இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து வேலை செய்து வருகிறார்கள். அதேற்கேற்றாற்போல் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இங்குள்ள ஓட்டல்கள், கட்டிட காண்டிராக்டர்கள் என அனைவரும் அவர்களை இங்கேயை தங்கவைத்து 3 வேளை உணவும் கொடுத்து வேலை தருகிறார்கள்.

திருட்டு செயலில் ஈடுபடும் கூட்டம்
ஆனால் அந்தக் கூட்டத்தில் இருக்கும் சிலர் குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதிக்கலாம் என்று நினைத்து சென்னையில் திருடுவது, செயின்பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்கின்றனர். இந்நிலையில், கோவில்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்த அலிமுதீன் அங்கே வசிக்கும் 17 வயது சிறுமியை அவ்வப்போது பின்தொடர்ந்துள்ளார். விலகி விலகிப் போனாலும் அந்த சிறுயிடம் சென்று காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

காதல்
ஆனாலும் சிறுமி சம்மதிக்காமல் இருந்ததால் ஏதேதோ பேசி அந்த சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தன் தாயிடம் தெரிவிக்க, அவர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆய்வாளர் நாககுமாரி சிறுமியிடம் தீவிர விசாரணை செய்தனர்.

தாய் புகாரில் கைது
இதன் பின்னர் புகாரில் முகாந்திரம் இருப்பதை உணர்ந்து அலிமுதீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆட்கடத்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட புகாரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. பின்னர் அலிமுதீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications