எனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக்
தூத்துக்குடி: எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போய் நிற்பேன் என நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகரும் மக்கள் உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் கூறுகையில் நான் பைலட் ஆகி ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது முதல் ஆசையாக இருந்தது. தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்.டி.ஏ) பயிற்சி பெற நினைத்தேன். ஆனால் நடிகராகிவிட்டேன்.

உளவுத்துறை
இருப்பினும் இன்று என்.டி.ஏ. கூட்டணியில்தான் சேர்ந்துள்ளேன். உங்கள் வரவேற்பினை பார்க்கும்போது சரியான முடிவை தான் எடுத்து உள்ளேன் என்பது தெரிகிறது. ராணுவம் எப்படி எல்லையில் நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ அது போன்று காவல்துறை, உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.

குழப்ப முயற்சி
உங்களின் வாக்குரிமை பற்றி உங்களுக்கு நல்லா தெரியும். நாடு நல்லா இருக்க வேண்டும். வீடு நல்லா இருக்க வேண்டும். மக்கள் நல்லா இருக்க வேண்டும். பலர் உங்களை குழப்ப முயற்சி செய்கின்றனர்.

பாஜக வெற்றி பெறும்
குறிப்பாக எதிர்க்கட்சியினர் மக்களை குழப்பி வாக்கு பெற முயற்சிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் நமது தமிழகம் நன்றாக இருக்கும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். 99.99 சதவீதம் பாஜக வெற்றி பெறும்.

100 சதவீதம் பாஜக வெற்றி
மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.100 சதவீதம் பா.ஜ.க. வெற்றி பெறும். வேறு யாராவது வந்தால் மக்கள் கஷ்டப்படும் நிலை வந்து விடும்.

தேசப்பற்று
இந்த தொகுதியில் நிற்கும் தமிழிசை செளந்தராஜன் என்பது நல்ல பெயர் மட்டுமல்ல நல்ல பெண்மணி, தேசத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாகரீகம், பண்பாடு, தேசப்பற்று குறித்து கற்று தர வேண்டும்.

பாடல்
யார் என்று தெரியாமல் கேள்விக்குறியுடன் உள்ள கூட்டணிக்கு வாக்களித்தால், நமது வாக்கு வீணாகிவிடும். இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லையில் போய் நான் நிற்பேன் என்றார் கார்த்திக். இதையடுத்து மக்கள் கேட்டதற்கிணங்க வெத்தல போட்ட சோக்குல பாடலை பாடினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications