சாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் முன்பாக பென்னிக்ஸ்சின் நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் முன்பாக பென்னிக்ஸ்சின் நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19ஆம் தேதி என்ன நடந்தது என்று சிபிசிஐடி போலீசாரிடம் ஐந்து பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மதுரை ஹைகோர்ட் வழிகாட்டுதலின் படி வியாபாரிகளின் மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை அவர்கள் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்குக் காரணம் சிறையில் இருந்த கைதிகள்தானாம். கெத்தாக வலம் வந்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தவர்களுடன் தாங்களும் இருக்க வேண்டியதாகி விட்டதே என மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டார்களாம் அதனால்தான் ஐந்து பேரையும் மதுரை சிறைக்கு மாற்றி விட்டார்களாம். அங்கும் கைதிகள் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு ஐந்து அறைகளில் தனித்தனியாக அடைத்திருக்கிறார்களாம்.
இன்னும் ஒரு சில தினங்களில் ஐந்து பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கும் எனத்தெரிகிறது. இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் ஐந்து பேர், விசாரணைக்காக சிபிசிஐடி முன் ஆஜராகியுள்ளனர்.
கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று சாத்தான்குளத்தில் நடந்தது என்ன? கடைமுன்பு காவல்துறையினருக்கும் பென்னிக்ஸ், ஜெயராஜ் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றியும் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜராகியுள்ள போலீசார் விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிகிறது.
இதனிடையே தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி சங்கர், சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி நேர்மையாகவும், நடுநிலையாகவும் விசாரித்து வருவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பென்னிக்ஸ்சின் நண்பர்கள் கூறப்போகும் வாக்குமூலங்கள் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications