சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. நீதிபதி முன்பு சாட்சியம் அளித்த பென்னிக்ஸ் தாயார்
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக பென்னிக்ஸ் தாயாரிடம் சாட்சிய விசாரணை நடந்தது. நீதிபதியிடம் பென்னிக்ஸ் தாயார் சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சமயதுரை உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனிடைய வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மனைவியும் பென்னிக்ஸ்சின் தாயாருமான செல்வராணி நீதிபதி முன்பாக இன்று சாட்சியம் அளித்தார்.












Click it and Unblock the Notifications