திருச்செந்தூரில் இன்று நடந்த ஆச்சரியம்.. தொலைந்த பொருள்.. சூரசம்ஹார நிகழ்வில் பக்தர் நெகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற முருகன் கோவிலான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த போது தொலைந்து போன பை, முருகன் அருளால் மீண்டும் கிடைந்துள்ளதாக பக்தர் ஒரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் தவித்த நிலையில், தொலைந்த பை கிடைத்ததாக நெகிழ்ந்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டது என்று கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் என்றால் அது திருச்செந்தூர் தான். மற்ற கோயில்கள் எல்லாமே மலைக்கோயில்களாகவே இருக்கும்.

திருச்செந்தூரை பொறுத்தவரை எல்லா நாட்களிலும் முருகனை தரிசிக்க பக்தர்கள் வருவார்கள். எனினும் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி , தை பூசம் போன்ற விழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் கந்தசஷ்டி விழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி என்பது முதல ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முக்கியமான நாள் என்றால் சூரசம்ஹாரம் தான். அது இன்று நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் பேர் வந்துள்ளனர்.
அப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் முதல் முதலாக சூரசம்ஹார விழாவை நேரில் காண திருச்செந்தூருக்கு வந்திருக்கிறார். திருச்செந்தூர் வந்த சுப்பிரமணியன் கடற்கரையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தனது பையை கடற்கரையில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றிருக்கிறார்.. பையை பத்திரமாக வைத்திருக்கும் படி கூறிவிட்டு குளிக்க சென்ற சுப்பிரமணியன், குளித்து விட்டு வந்து பார்த்தபோது அவர் பையை கொடுத்து வைத்திருந்தவர்கள் யாரையும் காணாதது திடுக்கிட்டார். அத்துடன் அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் எதையும் எடுக்கவில்லை. பையை அங்கேயே வைத்து விட்டு வந்தோம் என்று கூறியிருக்கிறார்கள்
எனினும் பையைக் காணமல் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து போய் உள்ளார். கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லாத நிலையில் தனது உடமைகளை தொலைத்த சுப்பிரமணியன் கலங்கி போனார். ஒருகட்டத்தில் அங்கிருந்த காவல்துறையிடம் சுப்பிரமணியன் உதவி கேட்டுள்ளார். பின்னர் அவரே கடற்கரை முழுக்க பையைத் தேடி அலைந்தள்ளார். இந்நிலையில் பையை தொலைத்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் அவரது பை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை கண்டு மகிழ்ந்து போன சுப்பிரமணியன், பையை திறந்து பார்த்தபோது செல்போன் ஏடிஎம் கார்டு வாட்ச், பணம் என அனைத்து பொருட்களும் திருடு போகாமல் அப்படியே இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் தனது பொருள் முருகன் அருளால் திரும்ப கிடைத்ததாக சுப்பிரமணியன் நெகிழ்ச்சி அடைந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications