மகனை அடிச்சிட்டாராம்.. எட்டையபுரத்தில் தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த மாணவரின் அம்மா, அப்பா.. ஷாக்

பள்ளி மாணவனை ஆசிரியர் அடித்ததாக கூறி பள்ளிக்குள் புகுந்து சூறையாடியதோடு தலைமையை ஆசிரியர், ஆசிரியரை தாக்கிய பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அடிக்காதீங்க..ஐயோ அடிக்காதீங்க என்ற அலறல் சத்தம் நிற்காமல் ஒலித்தது. மேஜை நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த காட்சிகள் ஏதோ கலவரம் என்று நினைத்து விட வேண்டாம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே தொடக்கப்பட்டியில் மாணவனின் பெற்றோர் நடத்திய வெறியாட்டம்தான். மாணவனை அடித்ததாக கூறி ஆசிரியரையும் தலைமை ஆசிரியையும் கடுமையாக தாக்கியுள்ளனர் பெற்றோர்கள்.

பள்ளியில் பெற்றோர்கள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு என்ன நடந்தது என்று விசாரித்ததில் வழக்கமாக
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள்,60 தலைமை ஆசிரியராகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. மெதுவாக விளையாடும்படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனை மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார்.

ஆசிரியர் மீது புகார்

ஆசிரியர் மீது புகார்

இதையடுத்து முனியசாமி அவசர போலீஸ் எண் 100 அழைத்து புகார் செய்துள்ளார். இதை எடுத்து போலீசார் நேற்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தாக்குதல்

பெற்றோர்கள் தாக்குதல்

இந்நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் அவரது மனைவி செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர் எப்படி பையனை அடிக்கலாம் என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி ஆசிரியர் பாரத்தை காட்டமாக பேசியது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுக்கும் நோக்கில் பேசினர்.

ஆவேசத்துடன் அடித்த பெற்றோர்

ஆவேசத்துடன் அடித்த பெற்றோர்

ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்களுடன் ஆவேசமாக பள்ளிக்குள் நுழைந்த மேஜை, நாற்காலிகளை சூறையாடினர். அதனை தடுத்த ஆசிரியை குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த பிற ஆசிரியர்களும் மாணவர்களும் ஐயோ ஐயோ என்று அலறினர்.

ஓட ஓட விரட்டி தாக்குதல்

ஓட ஓட விரட்டி தாக்குதல்

மேலும் காலணி எடுத்து ஆசிரியர் பாரத்தை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.‌ இதை தடுக்க வந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கி கீழே தள்ளினர். இது குறித்து சம்பவம் கேள்விப்பட்டதும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட சிவலிங்கம் , செல்வி மற்றும் முனியசாமி ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாணவரின் பெற்றோர் ஆசிரியர் மீது தாக்கல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆசிரியர்கள் அச்சம்

ஆசிரியர்கள் அச்சம்

மாணவ மாணவிகளை கண்டிக்கும் ஆசிரியர்களை பெற்றோர்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பல ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை கண்டுகொள்ளாமல் விடுவதால் அவர்கள் தவறான பாதைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+