திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில்.. பெண்ணை வளைத்து வளைத்து வீடியோ.. யாருங்க அது? திசைமாறி போன "சம்பவம்"
தூத்துக்குடி: இளம்பெண்களை வளைத்து வளைத்து வீடியோ எடுத்திருக்கிறது ஒரு கும்பல். இவர்கள் வடமாநில தொழிலாளர்கள் என்றும் சொல்லப்படுவதால், பரபரப்பும் அதிர்ச்சியும் கூடிவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கல்லாமொழியில் அனல்மின் நிலையம், துறைமுகம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த பணிகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீண்ட கால கட்டுமான பணிகள் என்பதால், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வீடு எடுத்து தங்கி, வேலை பார்த்து வருகிறார்கள்..
பெண் பயணிகள்: இந்நிலையில் சம்பவத்தன்று, குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் ஒன்று வந்துள்ளது.. இதில், ஏராளமான பெண் பயணிகள் உட்கார்ந்திருந்தனர்.
இதே பேருந்தில், வடமாநில தொழிலாளர்களும் வந்திருக்கிறார்கள். அப்போது, பஸ்ஸில் இருந்த பெண்களை, செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இதை பஸ்ஸிலிருந்த இளைஞர் ஒருவர் கவனித்துள்ளார். அதற்குள் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டு வந்துவிடவும், அங்கிருந்த போலீசிடம் இதை பற்றி புகார் சொல்லி உள்ளார்.
ஆனால் போலீஸ்காரர்களோ, வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்களை விசாரிக்காமல், புகார் சொல்ல வந்த இளைஞரை பிடித்து வைத்துக் கொண்டார்களாம். அவரது செல்போனையும் பறித்து வைத்து கொண்டதால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பஸ் ஸ்டாண்டு முழுக்க பரபரப்பாகிவிட்டது.

பயணிகள்: விஷயத்தை கேள்விப்பட்ட பஸ் பயணிகளும், அங்கிருந்த திருநங்கைகளும், இளைஞருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள்.. போலீஸ்காரிடம் அனைவரும் சேர்ந்து வாக்குவாதம் செய்தார்கள்.. எனினும், இளைஞரின் கன்னத்தில் அறைந்த போலீசார் திருச்செந்தூர் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்று, பிறகு விடுவித்துவிட்டார்களாம்.
இப்படித்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பும், இதேபோலவே, வடமாநில தொழிலாளர்கள், திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பெண்களை வீடியோ எடுத்தார்களாம். உடனே அங்கிருந்த திருநங்கைகள், இதுகுறித்து, போலீசில் புகார் செய்தபோதும், வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

வீடியோ: பெண்களை வீடியோ எடுத்தவர்களை விட்டுவிட்டு, புகார் சொல்ல வந்தவரை போலீஸார் தாக்கிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் உண்மைத்தன்மை என்ன? போலீசார் ஏன் அந்த இளைஞரை விசாரித்தனர்? என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், போலீஸ்காரருக்கும், இளைஞருக்கும், திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த வாக்குவாதம், இணையத்திலும் வீடியோவாக வெளியாகி உள்ளது..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications