திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு.. ஜூலை 7 ம் தேதி காலையில் குடமுழுக்கு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி மதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

tiruchendur temple kumbabishekam

இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணி சிறப்பாக நடைபெற்று வந்தது.

கும்பாபிஷேகத்துக்கான நேரம் மட்டும் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தான் கும்பாபிஷேக தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. கோவிலை சுற்றி ரூ.300 கோவில் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை மண்டபம் அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூலை 7 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேர்வு செய்யப்பட்டாலும் கூட நேரம் ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வந்தது. ஜூலை 7 ம் தேதி காலையில் 6.15 மணி முதல் 6.50 மணி வரை அல்லது காலை 10 மணிக்கு மேலும், மதியம் 12 மணிக்கு மேலேயும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வந்தன.

ஆனால் இறுதியாக கோவில் நிர்வாகம் ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணிக்குள் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டு நேரத்தை அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தருவார்கள். இதனால் பக்தர்களின் பாதுகாப்பு, வாகனங்கள் நிறுத்தவும் தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+