தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை துரோகம்".. அன்னைக்கு "அது" மட்டும் நடந்திருந்தா.. இது வந்திருக்குமா.. சிஆர் சரஸ்வதி அட்டாக்

டிடிவி தினகரன் நிச்சயம் வெற்றி பெறுவார் என சிஆர் சரஸ்வதி கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: "நான் ஒன்னே ஒன்னுதான் கேட்கிறேன், அன்னைக்கு மட்டும் அது நடந்திருந்தால், இந்த ஆட்சி வந்திருக்குமா? இவங்ககெல்லாம் இன்னைக்கு அமைச்சர்களாக இருந்திருப்பாங்களா? நாங்க கேட்கிறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் விசுவாசம் எங்கே போய்விட்டது? ஏன் நன்றி மறந்ததீங்க? இங்கே ஏன் துரோகம் செய்தீங்க?" என்று அமமுகவின் சிஆர் சரஸ்வதி அதிமுகவை நோக்கி கேள்வி கணைகளை வீசியுள்ளார்.

இந்த முறை கோவில்பட்டியில் டிடிவி தினகரன் களம் இறங்குகிறார்.. இதுவரை வெளிவந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் அமமுகவின் செல்வாக்கு தென்மாவட்டங்களில் பெருகி வந்துள்ளது என்பதும், இதனால் அதிமுகவுக்கு சிக்கல் என்றும், அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் யூகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருக்கோயிலில், அமமுகவின் செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:

"25 சீட்".. அப்டி அழுதாரே.. கொஞ்சமாவது மானம் இருக்கா.. விடாமல் வரிந்து கட்டிக் கொண்டு வந்த குஷ்பு

பேட்டி

பேட்டி

"அன்னைக்கு ஆர்கே நகரில் குக்கருக்கு எப்படி வரவேற்பு இருந்ததோ, அந்த மாதிரிதான் இன்னைக்கு தமிழ்நாடு பூராவும் மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.. குக்கருக்குத்தான் ஓட்டு போடுவோம்னு சந்தோஷமா சொல்றாங்க.. அமைச்சர் கடம்பூர் ராஜுதான் டிடிவி தினகரனை நிற்கசொல்லி ஆசைப்பட்டார். அதுக்குதான் தினகரன் கோவில்பட்டி தொகுதியில் நிற்கிறார்... அவருக்கு கோவில்பட்டி மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள்.

சசிகலா

சசிகலா

அதிமுக சசிகலாவை நோக்கி மிக விரைவில் வரும்... இது காலத்தின் கட்டாயம்.. அதுவும் மிகப்பெரிய பொறுப்பில் சசிகலா கூடிய சீக்கிரம் வருவார்... இப்போது அவர் ஆன்மீக பயணத்தினை மேற்கொண்டுள்ளார். விரைவில் சசிகலா அரசியல் பயணத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை... நிச்சயம் அது நடக்கும்..

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

தீர்ப்பு வந்ததும் சசிகலா கிளம்பி சென்று இருந்தால் இந்த ஆட்சி வந்திருக்காது... இவங்ககெல்லாம் இன்னைக்கு அமைச்சர்களாக இருந்திருப்பாங்களா? நாங்க கேட்கிறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் விசுவாசம் எங்கே போய்விட்டது? ஏன் நன்றி மறந்தீங்க? இங்கே ஏன் துரோகம் செய்தீர்கள்?

 துரோகம்

துரோகம்

எல்லாரும் ஒன்று சேர்ந்து தீய சக்தி திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் ஆசை... ஆனால், இதை புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... ஒரு மனுஷனுக்கு நன்றி முக்கியம்.. ஆனால் அதைகூட மறந்துட்டு, இன்னைக்கு துரோகத்தின் உச்சிக்கு போய், எல்லாமே நான்தான்னு நினைக்கிறார்... இது ரொம்ப பெரிய தப்பு.. இதுக்கான பதிலை தமிழக வாக்காள பெருமக்கள் தருவாங்க.

English summary
TTV Dinakaran will win in the Kovilpatti Constitution, says CR Saraswathi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X