தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் இடமாற்றம்.. கொரோனாவுக்கு பின்னர் இது 4ஆவது முறை!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் திருவாசகமணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா நெருக்கடியில் தமிழகம் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்க பயிற்சி மருத்துவர்களின் விடுதியை பயன்படுத்த அந்த கல்லூரி டீன் திருவாசகமணி முடிவு செய்திருந்தார்.

Tuticorin Government College Dean transferred to Virudhunagar

ஆனால் இதற்கு பயிற்சி மருத்துவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பயிற்சி எடுத்தும் வரும் நிலையில் அவர்களின் பணிக்காலம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

இதையடுத்து பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை திருவாசகமணியிடம் கேட்டனர். ஆனால் அவர் அதை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா வார்டாக மாற்றுவதற்கு அந்த விடுதியை அவர்கள் காலி செய்யவில்லை.

அப்போது கொரோனா பரிசோதனை குறித்து டீன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அவர் விருதுநகர் அரசுக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது போல் அந்த கல்லூரியின் டீன் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.

கொரோனா நெருக்கடியின் போது டீன் மாற்றப்படுவது இது 4ஆவது முறையாகும். ஏற்கெனவே சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, கோவை, திருச்சி ஆகிய மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+