சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் சொந்த ஊரில் வெடித்த போராட்டம்.. பாக். தேசிய கொடி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சொந்த ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற வீரரும் பலியானார்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளேயான, சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியனின், நண்பர்கள் மற்றும் சவலாப்பேரி கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை தீயிட்டு எரித்தனர்.
மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை மற்றும் உருவப்படத்தையும் தீயிலிட்டு எரித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications