பள்ளிவேனை ஓட்டியபோது மாரடைப்பு.. 21 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்
தூத்துக்குடி : ஆறுமுகநேரியில் பள்ளி வேனை ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 21 மாணவர்களை காப்பாற்றிவிட்டு டிரைவர் உயிரைவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே செல்வன் புதியனூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (45), இவர், ஆறுமுகநேரியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் வேனில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வேனில் 21 மாணவ மாணவிகளும், 5 ஆசிரியர்களும் இருந்தனர்.
ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரை கடந்து வேனை ஒட்டிக்கொண்டு மோகன்ராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய நிலையிலும் மோகன்ராஜ், வேனின் வேகத்தை குறைத்து இடது பக்கம் திருப்பியதோடு, எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் அருகில் இருந்த வீட்டின் தடுப்பு சுவரில் லேசாக மோதி வேனை நிறுத்திவிட்டு உயிரைவிட்டார்.
உயிர் போகும் நிலையிலும், வேனில் இருந்த மாணவ மாணவிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர் செல்வராஜின் உடலை பார்த்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த விபத்து குறித்து அறிந்து வந்த ஆறுமுகநேரி போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications