தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. ரஜினி விளக்கம் தர வேண்டும்.. விசாரணை ஆணையம் அதிரடி சம்மன்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விளக்கம் அளிக்க ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விளக்கம் அளிக்க நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்தர அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வந்தனர். அங்கு 100 நாட்கள் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கடந்த 2018ம் வருடம் மே மாதம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்திய போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
மிக கொடூரமான போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 10 வயது சிறுமி கூட போலீஸ் மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

என்ன விசாரணை
நாடு முழுக்க இந்த சம்பவம் உலுக்கியது. இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இதை பற்றி விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் இதுவரை 17 கட்ட விசாரணைகளை செய்து முடித்துள்ளது. முக்கியமான நபர்களை இப்போதுதான் இந்த ஆணையம் விசாரிக்க தொடங்கி உள்ளது.

ரஜினி சந்தித்தார்
இந்த துப்பாக்கி சூடு நடந்த பின் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை தூத்துக்குடி மருத்துவமனையில் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் போராட்டம் நடந்தால் எந்த தொழில் முதலீடும் வராது. இப்படித்தான் தமிழகம் வறுமையில் இருக்கும். தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால் நாடே சுடுகாடாகிவிடும். அனைத்திற்கும் போராட்டம் போராட்டம் என்று சுற்ற கூடாது.

ரஜினி அளித்த பேட்டி
தமிழகத்திற்கு முதலீடு வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலை வாய்ப்பும் கிடைக்காது. மக்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.இப்படியே செய்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும். இளைஞர்களும் கஷ்டப்படுவார்கள். இந்த போராட்டத்தில் அந்நிய சக்திகள் புகுந்து விட்டார்கள். இது போன்ற விஷயங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு விஷக்கிருமிகளை, சமூக விரோதிகளை அடக்க வேண்டும்.

சமூக விரோதிகள்
இந்த போராட்டம் சமூக விரோதிகள் மூலம் தூண்டி விடப்பட்ட போராட்டம்; புனிதமான போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டார்கள். இதில் தற்போது ரத்தக்கறை பதிந்துவிட்டது. இவர்களை எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும். அந்த விதத்தில் ஜெயலலிதாவை பாராட்டுவேன். அவர் சமூக விரோதிகளை உடனுக்குடன் கைது செய்து வந்தார், என்று குறிப்பிட்டார்.

விளக்கம் வேண்டும்
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விளக்கம் அளிக்க ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்தர அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரத்திற்கு சமூகவிரோதிகளே காரணம் என்று சொன்னது ஏன்? இது தொடர்பாக அளித்த பேட்டி குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications