திருமணமாகி ஒன்றரை வருடத்தில் மரணம்.. கதறும் மனைவி.. சோகத்தில் சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் கிராமம்
Recommended Video

தூத்துக்குடி: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களில், ஒருவர் பெயர் சிவச்சந்திரன். மற்றொருவர் சுப்பிரமணியன்.
சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்தவர். சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலப்பேரி கிராமத்தை சேர்ந்தவர்.
ஐடிஐ படிப்பு முடித்த சுப்பிரமணியன், முதலில் விவசாயப் பணிகளை பார்த்தார். பிறகு ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார்.

ஒன்றரை வருடங்கள்
5 வருடங்கள் பணியாற்றிய நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக, கிருஷ்ணவேணியுடன் திருமணமானது. சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த சுப்பிரமணியன், ஒரு மாத விடுமுறையை குடும்பத்தோடு கழித்தார். இந்த நிலையில்தான், சுப்பிரமணியன் கொல்லப்பட்ட தகவலை, அவரது குடும்பத்தாரால் ஏற்க முடியவில்லை.

கிருஷ்ணவேணி கண்ணீர்
அவரது மனைவி கிருஷ்ணவேணி, நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: ராணுவத்தில் படும் கஷ்டங்களை எனக்கு தெரியாமல் மறைத்துவிடுவார். காஷ்மீரில் ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசுவது வழக்கம். அப்படி சமீபத்தில் கல் வீசியதில் எனது கணவர் தலையில் அடிபட்டது.

கஷ்டங்களை மறைப்பார்
இதுபற்றி ஊருக்கு வந்தபோது கேட்டேன். ராணுவத்திற்கு வந்த சரக்குகளை இறக்கினோம் அதுலதான் அடிபட்டது என்று எனது கணவர் சொன்னார். ஆனால் உண்மையை தனது அக்காவிடம் சொல்லியுள்ளார். அவர் சொல்லிதான் எனக்கு தெரியவந்தது.

பெருமை
எனது கணவர் வீரமரணம் அடைந்துள்ளார். நாட்டுக்காக அவரது உயிர் போனது பெருமை என்றாலும், இது சாகக்கூடிய வயதில்லை. கல்யாணம் ஆகி ஒன்றரை வருடத்தில் எனது கணவர் போனது பெரிய இழப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கணவரை நாட்டுக்காக இழந்த கிருஷ்ணவேணிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், அவரது கண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த அரசின் கடமை என உறவினர்கள் தெரிவித்தனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications