சாண எரு பள்ளத்தில் தேங்கிய மழை நீர்.. 2 சிறுமிகள் மூழ்கி பலி.. வேலூரில் சோகம்!
மழை நீர் தேங்கிய வெள்ளத்தில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தனர்
வேலூர்: சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
ஒடுகத்தூர் அடுத்த கேஜி ஏரியூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த தம்பதி வேல்முருகன் - ஸ்ரீபா. இவர்களுக்கு 6 வயதில் ஹரிணி, 3 வயதில் பிரித்திகா என்ற பெண் குழந்தைகளும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

வேல்முருகனுக்கு சொந்தமாக வீட்டு பக்கத்திலே விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகே மாட்டு சாணம் கொட்டி வைத்திருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்புதான் அந்த சாணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் அந்த இடத்தில் 4 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனிடையே கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்யவும், நிலத்தில் தேங்கிய மழைநீர், அங்கிருந்த 4 அடி பள்ளத்தில் ஓடி விழுந்து நிரம்பியது. அதனால் அந்த பள்ளம் தண்ணீரால் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் மழையில் ஹரிணியும், பிரித்திகாவும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேருமே இதில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்துவிட்டனர். விளையாட போன குழந்தைகள் வரவில்லையே என்று வீட்டில் உள்ளவர்கள் தேடியபோதுதான், பள்ளத்தில் 2 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.
தகவலறிந்த அணைக்கட்டு தாசில்தார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சடலங்களையும் மீட்டு விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மழை நீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் இறந்தது பற்றி கலெக்டர் சண்முக சுந்தரம் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications