வேலூர் மாவட்டத்தில் வெளுத்தெடுத்த மழை! 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை.. ஆட்சியர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கனழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இது சுமார் 3 மணி நேரம் வரை கொட்டித் தீர்த்தது, மேலும் இரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது. அந்த வகையில் நேற்று இரவு முதல் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். அதாவது 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications