Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் ஸ்ரீபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை தந்தார். வேலூர் வந்திறங்கிய அவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஹெலிபேட் தளத்தில் வரவேற்றார். தொடர்ந்து திரவுபதி முர்மு வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி வேலூரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12.30 மணியளவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரவுபதி முர்மு திருப்பதி புறப்பட்டார்.

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இன்று தமிழ்நாடு வருகை தந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்த குடியரசுத்தலைவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வரவேற்றார். தொடடர்ந்து வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற தங்க கோயிலில் உள்ள வெள்ளி விநாயகரை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழிபட்டார்.

president-droupadi-murmu-visits-tamil-nadu-today-tight-secrutiy-in-vellore

சாமி தரிசனம் செய்தார்

அதன்பிறகு அங்குள்ள மகாலட்சுமி மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய தெய்வங்களை வழிபட்டார். அப்போது அவருக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. தீர்த்தத்தை திரவுபதி முர்மு பக்தியோடு வாங்கிக்கொண்டார். தொடர்ந்து வைபவ லட்சுமிக்கு பூஜைகள் செய்தார்.

இதன் பின்னர் தங்க கோயில் வளாகத்தில் சக்தி அம்மா முன்னிலையில் மரக்கன்றுகளை குடியரசுத்தலைவர் நட்டார். பின்னர் தனது தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அவர் பிற்பகல் 12.30 மணியளவில் திருப்பதிக்கு புறப்பட்டார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி தங்க கோயில் வளாக பகுதி முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் உள்ள அரியூர் பகுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? விடுதிகளில் தங்கியுள்ள நபர்கள் யார் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குடியரசுத்தலைவர் வருகை தரும் போது ஸ்ரீபுரம் - ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்திற்கு வருகை தந்தார். வெலூர் வந்த குடியரசுத் தலைவரை ஹெலிபேட் தளத்தில் வரவேற்றார். இதனால், வேலூர் நகரம் முழுவதுமே ஹை அலர்ட்டில் கொண்டு வரப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+