பொதுசிவில் சட்டம்.. வேலூரில் இன்று மதநல்லிணக்க மாநாடு! துரைமுருகன், திருமா, சத்யராஜ் பலர் வராங்க
வேலூர்: திராவிட நட்புக் கழகம் நடத்தும் மதநல்லிணக்க மாநாடு இன்று வேலூரில் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் துரைமுருகன், ஜெகத்திரட்சகன் எம்பி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
திராவிட நட்புக் கழகம் சார்பாக இன்று வேலூரில் மதநல்லிணக்க மாநாடு நடத்தப்பட இருக்கிறது. வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மத நல்லிணத்தை ஏற்படுத்தவே இது நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இதில் கலந்துகொண்டு இறுதி பேருரை ஆற்ற இருக்கிறார். இதில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனும் கலந்துகொள்ள உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், நடிகர் சத்யராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், அருட்தந்தை ஜெகத் கஸ்பார், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இதுகுறித்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு இருக்கும் சுப வீரபாண்டியன், "திராவிடர் நட்புக் கழகத்தின் சார்பில் ஜூலை 9 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலூர் பெரியார் பூங்காவுக்கு அருகே மத நல்லிணக்க மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது.
அந்த மத நல்லிணக்க மாநாட்டுக்கு இப்போது என்ன தேவை என்று எல்லோரும் நினைக்கலாம். எல்லோரும் ஒற்றுமையாக தானே இருக்கிறோம். ஆம், ஆனால் அந்த ஒற்றுமைக்குள் வேற்றுமையை அச்சுறுத்தலை கொண்டு வந்து இருக்கிறார்களோ என்ற அச்சம் வருகிறது.
நேரடியாக சொல்லப்போனால், பொது சிவில் சட்டம் என்பது வரப்போகிறது என்கிற அச்சம் எல்லோரையும் சூழ்ந்து இருக்கிறது. வரும் முன் காப்போம் என்பதுதான் சரி என்பதால் வருவதற்கு முன்பே அதற்கான அணைபோடும் பணியாகதான் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது நாட்டுக்கு பொதுவானது. ஒரு நாட்டுக்கு 2 சட்டங்கள் இருக்கலாமா என்று பிரதமர் அவர்கள் கேட்கிறார். ஒரு நாட்டுக்கு 2 குற்றவியல் சட்டங்கள் இருக்கக்கூடாது. இல்லை. ஒரு நாட்டுக்கு 2 தண்டனைச் சட்டங்கள் இருக்கக்கூடாது. இல்லை. ஆனால், வெவ்வேறு பண்பாடுகள், வெவ்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாட்டில் வெவ்வேறு சட்டங்கள் இருக்கத்தானே செய்யும்." என்று தெரிவித்து உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications