பொதுசிவில் சட்டம்.. வேலூரில் இன்று மதநல்லிணக்க மாநாடு! துரைமுருகன், திருமா, சத்யராஜ் பலர் வராங்க
வேலூர்: திராவிட நட்புக் கழகம் நடத்தும் மதநல்லிணக்க மாநாடு இன்று வேலூரில் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் துரைமுருகன், ஜெகத்திரட்சகன் எம்பி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
திராவிட நட்புக் கழகம் சார்பாக இன்று வேலூரில் மதநல்லிணக்க மாநாடு நடத்தப்பட இருக்கிறது. வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மத நல்லிணத்தை ஏற்படுத்தவே இது நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இதில் கலந்துகொண்டு இறுதி பேருரை ஆற்ற இருக்கிறார். இதில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனும் கலந்துகொள்ள உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், நடிகர் சத்யராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், அருட்தந்தை ஜெகத் கஸ்பார், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இதுகுறித்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு இருக்கும் சுப வீரபாண்டியன், "திராவிடர் நட்புக் கழகத்தின் சார்பில் ஜூலை 9 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலூர் பெரியார் பூங்காவுக்கு அருகே மத நல்லிணக்க மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது.
அந்த மத நல்லிணக்க மாநாட்டுக்கு இப்போது என்ன தேவை என்று எல்லோரும் நினைக்கலாம். எல்லோரும் ஒற்றுமையாக தானே இருக்கிறோம். ஆம், ஆனால் அந்த ஒற்றுமைக்குள் வேற்றுமையை அச்சுறுத்தலை கொண்டு வந்து இருக்கிறார்களோ என்ற அச்சம் வருகிறது.
நேரடியாக சொல்லப்போனால், பொது சிவில் சட்டம் என்பது வரப்போகிறது என்கிற அச்சம் எல்லோரையும் சூழ்ந்து இருக்கிறது. வரும் முன் காப்போம் என்பதுதான் சரி என்பதால் வருவதற்கு முன்பே அதற்கான அணைபோடும் பணியாகதான் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது நாட்டுக்கு பொதுவானது. ஒரு நாட்டுக்கு 2 சட்டங்கள் இருக்கலாமா என்று பிரதமர் அவர்கள் கேட்கிறார். ஒரு நாட்டுக்கு 2 குற்றவியல் சட்டங்கள் இருக்கக்கூடாது. இல்லை. ஒரு நாட்டுக்கு 2 தண்டனைச் சட்டங்கள் இருக்கக்கூடாது. இல்லை. ஆனால், வெவ்வேறு பண்பாடுகள், வெவ்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாட்டில் வெவ்வேறு சட்டங்கள் இருக்கத்தானே செய்யும்." என்று தெரிவித்து உள்ளார்.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications