மத்திய கூட்டுறவு வங்கியின் மேனேஜர்.. அதுவும் ஒரு பெண்.. பண்ண வேலையை பார்த்தீங்களா.. இப்போ டிஸ்மிஸ்!
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் மத்திய கூட்டுறவு வங்கியின் பெண் கிளை மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூரை அடுத்த குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பணம் போடுவது, எடுப்பது மற்றும் பயிர்க்கடன், விவசாயக்கடன் மற்றும் மகளில் சுயஉதவிக்குழு கடன், புதிய தொழில் கடன் என பல உதவிகளுக்காக நாடுவது வழக்கம்.

இந்நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் உமா மகேஸ்வரி மீது பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதாவது, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடி குறித்து குடியாத்தம் வங்கியில் வேலூர் வணிக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், உமா மகேஸ்வரி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உமா மகேஸ்வரி விசாரணைக்குப் பின்னர் வேலூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். உமா மகேஸ்வரிமீதான குற்றச்சாட்டு தணிக்கையின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில், உமா மகேஸ்வரியை பணி நீக்கம் செய்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வங்கி தொடர்பாக பொதுமக்கள் உமா மகேஸ்வரியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications