வேலூரில் பாஜக பிரமுகர் மர்ம மரணம்! “தலையில் அடிச்சி கொன்னுட்டாங்க..” மனைவி பரபர புகார்
வேலூர்: வேலூரில் பாஜக பிரமுகர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை அடையாளம் தெரியாத நபர்கள் தலையில் அடித்து கொலை செய்துவிட்டதாகவும், போலீசார் கொலையை மறைக்க முயல்வதாகவும் அவரது மனைவி போலீசில் குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்டத்தின் கேவி குப்பம் மேற்கு ஒன்றிய மாவட்ட கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளராக விட்டல்குமார் பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கும் அதே ஊரில் வசித்து வரும் வேறு சிலருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது. இது பகையாக வளர்ந்து முன் விரோதமாக முற்றியிருக்கிறது. முன் விரோதம் எப்போது வேண்டுமானாலும் விட்டல் குமார் மீதான தாக்குதலாக வெடிக்க கூடும் என்கிற நிலைமை இருந்து வந்திருக்கிறது.

இப்படி இருக்கையில்தான் நேற்று மாலை சென்னாங்குப்பம் எனும் பகுதியில் விட்டல் குமார் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். காயங்களை வைத்து பார்க்கும்போது அவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நிச்சயம் இது விபத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல என்றும் விட்டல் குமாரின் மனைவி ரேவதி கூறியுள்ளார்.

தனது கணவரின் சடலத்தை கைப்பறியது தொடங்கி, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது வரை போலீசார் அலட்சியமாக இருந்து வருகின்றனர் என்றும், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கட்சியின் தலைமைக்கும் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து விட்டல் குமாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு முன்பு திரண்ட பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்டோர், விட்டல் குமார் வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விட்டல் குமார் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அதன் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. பாஜக பிரமுகரின் மரணம் குறித்து காவல்துறையை விமர்சித்து அடுக்கம்பாறையில் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் வேலூரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications