வேலூரை உலுக்கிய காமுகன்கள்.. கதறி துடித்து தீக்குளித்த மாணவி.. பறிபோன உயிர்.. பாய்ந்தது குண்டாஸ்!
ஆபாச வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
வேலூர்: "ப்ளீஸ்.. நான் குளிக்கிற வீடியோவை டெலிட் செய்துடு" என்று கெஞ்சி கதறிய மாணவி தீக்குளித்து உயிரிழந்தே விட்டார்.. வேலூரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ எடுத்த 2 காமுகர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளி பூனை கண்ணன் என்பவர் செல்போனில் அதை வீடியோ எடுத்துள்ளார்.. இந்த வீடியோ எடுப்பதற்காக, தன்னுடைய நண்பர் தாமஸ், மற்றும் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவனையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
வீடியோ எடுத்துவிட்டு, மாணவிக்கு அதை அனுப்பியதுடன், தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர். இதை பார்த்து திடுக்கிட்ட மாணவி உடனடியாக வீடியோவை டெலிட் செய்தார்... மீண்டும் மீண்டும் வீடியாவை அனுப்பி கொண்டே இருக்கவும், அவர்களிடம் அதை டெலிட் செய்துவிடும்படி கெஞ்சி உள்ளார். ஒரு கட்டத்தில் மனம் நொந்த மாணவி, மண்ணெண்ணைய் எடுத்து உடம்பில் ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.
90 சதவீதம் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமிக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. அப்போது, வீடியோ எடுத்த அந்த 3 பேர் குறித்து போலீசில் சிறுமி வாக்குமூலமும் அளித்தார். அவர்களின் செல்போனில் தன்னுடைய வீடியோவுடன் மற்ற பெண்கள் குளிக்கும் வீடியோவும் இருந்ததாகவும், தன்பாட்டி குளிக்கிற வீடியோவும் அந்த செல்போனில் இருந்ததாகவும் சிறுமி தெரிவித்தார்.. பிறகு அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தனக்கு என்ன நடந்தது என்பதை வீட்டில் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிவைத்துவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்ட தகவல், பிறகுதான் போலீசாருக்கு தெரியவந்தது.. இது தொடர்பாக பூனை கண்ணன், தாமஸ் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இதில், 17 வயது சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் அனுப்பி வைத்தனர்.. ஆனால் அங்கு கொரோனா பிரச்சனை உள்ளதால் சிறுவனை, பெயிலில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பூனை கண்ணன், தாமஸ் மீது போக்சோ சட்டம் பதிவாகி இருந்த நிலையில், குண்டர் சட்டத்திற்கு மாவட்ட எஸ்பி பரிந்துரைத்தார். அதனை அடுத்து, கலெக்டர் உத்தரவுபடி பூனை கண்ணன், கணபதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications