அரசு ஊழியர்களுக்கு பறந்து வந்த ஆர்டர்.. வேலூர் மாவட்ட தாசில்தார்கள் அதிரடியாக பணியிட மாற்றம்
வேலூர்: வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், காட்பாடி தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கீதா குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக தனித்துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மொத்தமாக 8 துணைதாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுது வழக்கம்.நிர்வாக வசதிக்காக பல்வேறு தாசில்தார்கள், மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் இடமாற்றம் செய்யப்படுவது இயல்பான ஒன்று. வருவாய்துறையில் பணியாற்றும் பல்வேறு அதிகாரிகளுமே இடமாற்றம் செய்யப்படுவது அவ்வப்போது நடக்கும். அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 6 முதுநிலை வருவாய் உதவியாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று 2 துணை தாசில்தார்களும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், காட்பாடி தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கீதா குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக தனித்துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், குடியாத்தம் தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் கே.வி.குப்பம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் கே.வி.குப்பம் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் முன்னாள் கண்காணிப்பாளர் தேவிகலா காட்பாடி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தார் நதியா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்" என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி கூறியுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications