தேர்தல் நாளில் நடத்த சர்ச்சை.. பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.. வேலூர் எஸ்பி உத்தரவு
வேலூர் : தேர்தல் பணியின் போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் பாகாயம் சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு வேலூர், மதுரை, கோவை , தென் சென்னை, வட சென்னை என மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. வேலூரில் ஏப்ரல் 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவினை ஒட்டி, தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மண்டல பொறுப்பாளர்கள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய வாகனத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வேலூர் போலீஸ் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (மொபைல் டீம்) நியமிக்கப்பட்டனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லும் வேனிற்கான பாதுகாப்பு பணிக்கு வேலூர் பாகாயம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் மண்டல பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்றபோது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பணியில் இருந்த அரசு அலுவலர்களின் பணிக்கு இடையூறு மற்றும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான அறிக்கையை அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வழங்கினார். அதன்பேரில் வெங்கடேசனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications