காற்று ஒலிப்பான்கள்... கண்ணைப் பறிக்கும் விளக்குகள்... பஸ்களில் பறிமுதல் செய்த அதிகாரிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு பகுதியில் இயங்கும் பேருந்துகள் பலவற்றில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப் படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் வந்தது. இந்த காற்று ஒலிப்பான்களால் மக்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் உத்தரவின் அடிப்படையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் போன்றவற்றை பேருந்துகளில் இருந்து அவர்கள் நீக்கினர். மீண்டும் அவைகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications