உழைத்ததற்கு ஊதியம் இல்லை! மறியல் செய்த 100 நாள் வேலை பணியாளர்கள்! ஸ்தம்பித்த திண்டிவனம் சாலை!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் செஞ்சி -திண்டிவனம் பிரதான சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சுமார் 2 மணி நேரமாக சாலையின் இரு மருங்கிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உழைத்ததற்கு ஊதியம் கொடுக்கவில்லை என்பதே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் புகாராக உள்ளது.

100 நாள் வேலை
கிராமப்புறங்களில் வறுமையை நீக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். சாலையோரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுவது, குளம் வெட்டுவது என அவர்கள் பார்க்கும் பணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் வங்கியில் சம்பளம் செலுத்தப்படுவது வழக்கம். பல இடங்களில் இந்த ஊதியத்தை வங்கிகளில் இருந்து எடுப்பதற்குள் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் படாதபாடு படுவதை நம்மில் பலரும் பார்த்திருக்க முடியும்.

சம்பளம் இல்லை
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குறிஞ்சி கிராமத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் சம்பளமே வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், தொடர் அழுத்தத்திற்கு பிறகு விடுவிக்கப்படும் சம்பளத் தொகையும் குறைவாகவே உள்ளதாகவும் அதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கவில்லை எனவும் குறிஞ்சி கிராமத்தை சேர்ந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் புகார் கூறுகின்றனர்.

600 பேர்
பலமுறை இது தொடர்பாக முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் செஞ்சி-திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டு ஊதியம் கொடுக்காததற்கு என்ன காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்தும் பாதித்தது.

பேச்சுவார்த்தை
இதனால் செஞ்சி-திண்டிவனம் பிரதான சாலையின் இரு மருங்கிலும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கத் தொடங்கின. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications