என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட்.. பாமகவில் என்னிடமே அதிகாரம் இருக்கு.. ராமதாஸ் அறிவிப்பு!
விழுப்புரம்: என்னுடன் இருப்பவர்களுக்கே சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தனக்கு மட்டுமே இருப்பதாக கூறிய ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியில் பாமக போட்டியிடும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் உச்சத்திற்கு வந்தது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார். இதன்பின் பாமக தலைவர் பொறுப்பை தாமே எடுத்து கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.

புதிய நிர்வாகிகள்
அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்த அவர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளையும் மாற்றினார். இதுவரை மொத்தமாக 78 புதிய மாவட்டச் செயலாளர்களையும், 61 புதிய மாவட்ட தலைவர்களையும் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். இன்னொரு பக்கம் அன்புமணி மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வருகிறார்.
ராமதாஸ் ஆலோசனை
இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாமகவில் நியமனம் செய்த புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் சிலரை அறிமுகம் செய்ததோடு, பாமகவின் இணை பொதுச் செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை நியமனம் செய்து அறிவித்தார்.
ராமதாஸ் பேட்டி
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் பாமக மகளிர் மாநாடு நடக்கவுள்ளது. அதனை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்திருக்கிறோம். அதுகுறித்து ஆலோசனை செய்வதற்காக புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யவும் இந்த கூட்டம் நடைபெற்றது.
அருளுக்கு பதவி
பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி எம்எல்ஏ அருளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்துள்ளோம். எப்போதும் என்னுடன்தான் இருப்பார். அதேபோல் பாமக எந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. என்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு தான் பாமக சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.
தேர்தலில் சீட் யாருக்கு?
அவர்களுக்கே சீட் வழங்கப்படும். சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான, சிறந்த, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். பாமகவில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கே உள்ளது. கூட்டணி தொடர்பாக எதுவும் அதிகமாக சொல்ல முடியாது. பெரியார், அண்ணா ஆகியோரை வீடியோ வெளியிட்டது தவறு என்று தெரிவித்துள்ளார்.
-
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications