கட்டுப்படாத அன்புமணி.. நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம்.. பாமக செயற்குழுவில் வேட்டு!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பதும், நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவரும் பாமக நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதும் என்று மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாமகவில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுடன் ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

செயற்குழுவில் ராமதாஸ் மகள்
இந்த செயற்குழு கூட்டத்தில் கவுரவத் தலைவர் ஜிகே மணி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், இணை பொதுச்செயலாளர் அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் 11.30 மணியளவில் கூட்ட அரங்கிற்குள் வந்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதியும் பங்கேற்றார்.
அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
இந்த கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து பாமக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தலைவர் பதவியை மீண்டும் அபகரிக்கும் எண்ணத்தில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்புமணி செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் பேச்சு
தொடர்ந்து ராமதாஸ் பேசுகையில், நமக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. வெற்றி வாய்ப்பு உள்ள நிர்வாகிகள், தங்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாக வேண்டும். அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது. அதனை சந்திக்க உள்ளோம்.
ஏ ஃபார்ம், பி ஃபார்ம்
சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கொடுத்து கையெழுத்து போடுவது நான்தான். அடுத்த நடக்கவிருக்கும் மகளிர் மாநாட்டில் குறைந்தது 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளார்கள். 8 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் மாநாடு என்பதால், மாநில மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
2ஆக பிரியும் பாமக?
சில நாட்களுக்கு முன்பாக ராமதாஸின் அறிக்கையில் இருந்துவந்த அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. தற்போது பாமக செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் காரணமாக, பாமக இரண்டாக பிரியுமோ என்ற குழப்பம் நிர்வாகிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது.
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications