நாளை லோக்சபா தேர்தல் முடிவு.. மனைவி வெற்றிக்காக சரத்குமார் செய்த செயல்.. என்னென்ன பண்றாங்க பாருங்க!
விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ள ராதிகாவின் வெற்றிக்காக அவரது கணவர் சரத்குமார் கோயிலில் அங்கபிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக விருதுநகர் அமைந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி சார்பாக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பாக விஜய பிரபாகரன் மற்றும் பாஜக சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார்.

இதன்பின்னர் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிலும் தந்தி டிவியின் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், தேமுதிகவின் விஜய பிரபாகரனுக்கு 26 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், பாஜகவின் ராதிகா சரத்குமாருக்கு 21 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் மனைவி ராதிகா சரத்குமார் வெற்றிபெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கபிரதிஷ்டை செய்து கோயிலில் வழிபட்டுள்ளார். விருதுநகரில் உள்ள பிரபல கோயிலில் சரத்குமார் அங்க பிரஷ்டை செய்த போது, அவருடன் மனைவி ராதிகா சரத்குமாரும் உடனிருந்தார்.
அதன்பின் கோயிலில் வழிபட்டு இருவரும் புறப்பட்டனர். மனைவியின் தேர்தல் வெற்றிக்காக சரத்குமார் அங்கபிரதிஷ்டை செய்தது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அதேபோல் அங்கபிரதிஷ்டை செய்த வீடியோ சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications