ஒரு மாதத்திற்கு பிறகு பிளவக்கல் பெரியாறு அணைக்கு அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Recommended Video
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியார் அணை பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு பின்பு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியார் அணை.
இந்த பகுதி மாவட்டத்தின் முக்கிய அணையாகவும் , சுற்றுலா தளமாகவும் உள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
பிளவக்கல் பெரியார் அணை பகுதியில் யானைகள் சுற்றி திரிந்ததால் சுற்றுலா பயணிகளில் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது.
இந்நிலையில், யானைகள் காட்டு பகுதிக்குள் சென்று விட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு பின்பு பிளவக்கல் அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.