விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நயன்தாரா போலீசுக்கு போக போகிறார்.. "அவர்" உள்ளே போகப் போறார்.. குண்டை போட்ட ராஜேந்திர பாலாஜி!

Google Oneindia Tamil News

விருதுநகர்: "மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்-ன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு.. உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின், இப்போ போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் சொன்னதாவது:

"பூத் கமிட்டியில் எல்லாரும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். இரட்டை இலை படம், அம்மா படம், எம்ஜிஆர் படம், இபிஎஸ் படம், ஓபிஸ் படம் போட்ட அடையாள அட்டையை குத்திக்கிட்டுதான் எல்லாரும் ஓட்டு கேட்க வேண்டும்.. அதிமுக புலி வேட்டைக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.. திமுக எலி வேட்டைக்கு வருகிறார்கள்... நாம் அம்பை எடுத்து தொடுத்து வெற்றி பெற போகிறோம்.

"நாசமாக்கிட்டான்".. யார் அந்த நடிகை.. லேப்டாப்பில் சிக்கிய தடயங்கள்.. மாட்டிக் கொண்ட காசியின் அப்பா

 இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

ஸ்டாலின் என்னவோ முதலமைச்சர் மாதிரியே நடந்துக்கிறாரே.. மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. இது சம்பந்தமாக ஒரு கோரிக்கை கூட வைக்காமல் வாயைக்கிட்டு இருந்து விட்டு இப்போ நடிச்சிட்டு இருக்கார்.. யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்-ன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு.

 முக அழகிரி

முக அழகிரி

இப்போ ஸ்டாலினுக்கு புது பிரச்சனை ஒன்னு இருக்கு.. அவரை பழிவாங்க அவரது அண்ணன் அழகிரி கிளம்பிவிட்டார்... ஸ்டாலின் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று, அழகிரி போலீஸ்கிட்ட புகார் மட்டும் தரட்டும், நாங்க உடனே நடவடிக்கை எடுப்போம்.. நாங்கள் நயமாக பேசி, அறிவாலயத்தில் ஒரு பக்க வாசல் ஸ்டாலினுக்கும், இன்னொரு பக்க வாசல் அழகிரிக்கும் பிரித்து கொடுத்து விடுவோம்... உங்களுடைய ஒரு லட்சம் கோடி சொத்தை குடும்பத்தில் எல்லாருக்குமே பிரித்து கொடுத்து விடுவோம்.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய பிரச்சினை வருகிறது... அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின், இப்போ போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்.. ஆனால் இவங்க என்னை பிடிச்சு உள்ளே போட்டுவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறாங்க.. நான் நினைத்தால், இன்னிக்கே இவங்களை பிடிச்சு உள்ளே போட்டுடுவேன்.. ஏன்னா, எங்களிடம்தான் அதிகாரம் இருக்கு.. மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் கிடையாது.. என் பேச்சுக்கு பதில் சொல்ல முடியும்னா, எதிரெதிரே நின்று வெட்ட வெளியில் பேசுவோம் வா.

 பிழைக்கிற கட்சி

பிழைக்கிற கட்சி

நான் 10 வருஷமாக மந்திரியாக இருக்கேன்.. நான் அன்னையில இருந்து கோஷம் போட்டவன் கொடி பிடித்தவன், போஸ்டர் ஒட்டியவன்... நான் ஒன்னும் மிட்டா மிராசுதாரர் கிடையாது.. வாக்கு சாவடியில் வாழ்க்கையை தொலைத்தவன்.. இன்னைக்கு உழைப்பால் மாவட்ட செயலாளராக ஆகியிருக்கேன்.. அதிமுக உழைக்கிற கட்சி, திமுக பிழைக்கிற கட்சி" என்றார்.

English summary
Minister Rajendra Balaji slams MK Stalin and Udhayanidhi Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X