கோர்ட்டுக்கு லேட்டாக வந்த நிர்மலாதேவி.. காரணம் என்னவா இருக்கும்?
கோர்ட்டுக்கு நிர்மலாதேவி தாமதமாக வந்ததால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
ஸ்ரீவில்லிப்புத்தூர்: நிர்மலாதேவி கோர்ட்டுக்கு லேட்டாக வந்துவிட்டார். அதனால் அவரது வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக ஜெயிலுக்கும் கோர்ட்டுக்கும் அலையாய் அலைந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. ஒவ்வொரு முறை வரும்போதும் அவருடன், போலீசார் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் திரண்டு வருவார்கள். மீடியாவிடம் அவர் பேசிவிடக்கூடாது என்று பொத்தினாற் போலவே கூட்டிட்டு வந்து பொத்தினாற் போலவே அழைத்து சென்றுவிடுவார்கள்.

ஜாமீன் கிடைக்காதா என்று ஏங்கி கிடந்த நேரத்தில், கோர்ட் நேரடியாக தலையிட்ட பிறகுதான் நிர்மலாதேவிக்கு ஜாமீன் தரப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கும் வந்து போகிறார்.
கடந்த 13-ந் தேதிகூட ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் ஆஜராக வந்திருந்தார் நிர்மலாதேவி. மல்லிப்பூ, காட்டன் புடவை, ஹேண்ட் பேக் என ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வேற லெவலில் மாறி இருந்தார். அப்போது அவருடன் பேராசிரியர் முருகனும் ஆஜரானார்கள். அந்த வழக்கின் விசாரணை இன்றைய தினம் அதாவது 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று வழக்கின் விசாரணை கோர்ட்டுக்கு வந்தது. அப்போது, கருப்பசாமி, முருகன் ஆகியோரும் ஆஜரானார்கள். அப்போது நிர்மலா தேவி ஆஜராவதில் விலக்களிக்க கோரி மனு தரப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. அதனால் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்தார் நிர்மலாதேவி. அவர் எதனால் தாமதமாக வந்தார் என்று தெரியவில்லை என்றாலும், வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட பிறகு கோர்ட்டுக்கு வந்ததால் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications