மும்மொழிக் கொள்கை! யாராவது கோர்ட்டுக்கு போனால்! திமுக ஆட்சி கலையும்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
விருதுநகர்: மொழி விவகாரம் தொடர்பாக யாராவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படலாம் என புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி பேட்டி அளித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:பூர்வீக பட்டியல் மற்றும் ஆதி திராவிட மக்களுக்கு வழங்க வேண்டிய உள் ஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் பயன்களை பெற்று வருகிறார்கள்.

அதாவது தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வேறு ஒரு பிரிவினருக்கு தற்போதைய திமுக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அதிமுகவும் திமுகவும் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில் ஏறக்குறைய 20 மாவட்டங்களில் வாழக் கூடிய தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டையும் வட தமிழகத்தில் வாழும் பட்டியலின மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டையும் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் ஆந்திராவை சேர்ந்த ஆதி ஆந்திரர்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக 18% இட ஒதுக்கீடும் வழங்கக் கூடிய அநீதி நடைபெறுகிறது.
இந்த 3 சதவீதத்தைத்தான் பிரித்து கொடுத்து விடுங்கள் என தமிழக அரசுக்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் திமுகவும் அதிமுகவும் இதை செய்யவில்லை. இதை கண்டித்து விரைவில் மாநில அளவில் போராட்டம் நடத்த போகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அங்குள்ள மலைவாழ் மக்களை அந்த மலையை விட்டு வெளியேற்றுவது சரியல்ல.
ஒரு மொழியை கற்கக் கூடாது என கூறுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமே கிிடையாது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் மாநில கல்விக் கொள்கையும் வகுக்கப்பட வேண்டும். இங்கு எந்தவிதமான மொழித் திணிப்பும் இல்லை. ஜாதி, மதம், இனம் , மொழி ரீதியில் வேறுபாடு காட்டக் கூடாது.
மும்மொழி எனக் கூறுவது ஏழை, எளிய மக்கள் பயிலக் கூடிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம்தான் திமுகவினர் திணிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் படிக்கும் பள்ளி பற்றி இவர்கள் கூறுவது இல்லை. ஏழை மக்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்க மறுப்பது எந்த விபத்தில் நியாயம், தர்மம்!
இந்தியை யாரும் திணிப்பதில்லை. மத்திய அரசு பாடத் திட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டும்தான் மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இந்தி கிடையாது. இதை திமுக, அரசு பள்ளி மாணவர்களுக்கு தட்டிப் பறிப்பது சட்டவிரோதம்.
பல மொழிகளை கற்றுக் கொடுப்பதன் மூலம் தான் வாய்ப்புகள் நிறையக் கிடைக்கும். திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் திமுக அரசை கலைக்கக் கூடிய சூழல் ஏற்படலாம்.
இதே நிலை நீடித்தால் திமுக 2026 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்காது என நான் நினைக்கிறேன். மும்மொழிக் கொள்கையை எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பதும் தவறு. ஏழை குழந்தைகளின் வாழ்க்கையோடு திமுக விளையாடக் கூடாது. இதனால்தான் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. கல்வியை வைத்து திமுக சித்து விளையாட்டு விளையாடக் கூடாது. இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications