விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.. ராஜபாளையத்தில் சங்கிலி போட்டு ஒரு ஏரியாவுக்கே சீல்

Google Oneindia Tamil News

விருதுநகர்: டெல்லி நிஜாமுதின் மார்க்ஸ் பகுதியில் நடந்த மத மாநாட்டிற்கு சென்று திரும்பிய 4 பேருக்கு, கொரோனா அறிகுறி தென்பட்டதால், அவர்கள் வசித்து வரும் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதிக்கு சீல் வைத்து அப்பகுதி மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    டெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.. ராஜபாளையத்தில் சங்கிலி போட்டு ஒரு ஏரியாவுக்கே சீல்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து டெல்லி நிஜாமுதின் மார்க்ஸ் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

    Rajapalayam area sealed as coronavirus symptoms appear

    இந்தநிலையில் ராஜபாளையம் சம்மந்தபுரம் மற்றும் சீதக்காதி தெரு பகுதியை சேர்ந்த 4 பேரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

    Rajapalayam area sealed as coronavirus symptoms appear

    பரிசோதனை அறிக்கை இன்று வெளிவரும் நிலையில், ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியை சீல் வைத்து அந்தப் பகுதியில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் வெளியே வருவதற்கும், வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும் தடை விதித்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Rajapalayam area sealed as coronavirus symptoms appear

    சங்கிலியை போட்டு அந்த பகுதியை வேறு பகுதிகளில் இருந்து பிரித்துள்ளனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற பரபரப்பு அப்பகுதியில் இருக்கிறது.

    English summary
    Four people returned to Rajapalayam a religious conference in Nizamuddin's area in Delhi after the Corona sign was sealed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X