கண்ணை மறைத்த காதல்.. 10 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. காதலனுமா! அதிர்ந்த விருதுநகர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் மறுத்ததால் 10 ஆம் வகுப்பு மாணவி யாரும் எடுக்க கூடாத விபரீத முடிவை எடுத்துள்ளார். 15 வயதே ஆன அந்த மாணவி தன் காதலனுடன் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர். இவரது மனைவி நாச்சியார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. ஒரு மகள் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்றொரு மகள் காவியா. 15 வயது ஆன காவியா அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஈஸ்வர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
இந்த நிலையில் காவியா அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாணியன் மகன் ஆகாஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாக ஆகாஷும் - காவியாவும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆகாஷ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கினர்
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த காவியா ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆகாஷ் காவியா வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து மன வருத்தத்துடன் பேசியுள்ளனர். எப்படியும் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.
அதன்படி வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஆகாஷும், காவியாவும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் 10 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications