Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணை மறைத்த காதல்.. 10 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. காதலனுமா! அதிர்ந்த விருதுநகர்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் மறுத்ததால் 10 ஆம் வகுப்பு மாணவி யாரும் எடுக்க கூடாத விபரீத முடிவை எடுத்துள்ளார். 15 வயதே ஆன அந்த மாணவி தன் காதலனுடன் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர். இவரது மனைவி நாச்சியார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. ஒரு மகள் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்றொரு மகள் காவியா. 15 வயது ஆன காவியா அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஈஸ்வர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

virudhunagar-15-year-old-10th-grader-commits-suicide-with-lover-after-parents-reject-their-relation

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு

இந்த நிலையில் காவியா அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாணியன் மகன் ஆகாஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாக ஆகாஷும் - காவியாவும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆகாஷ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கினர்

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த காவியா ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆகாஷ் காவியா வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து மன வருத்தத்துடன் பேசியுள்ளனர். எப்படியும் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஆகாஷும், காவியாவும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் 10 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை தீர்வு அல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+