அமெரிக்க கலவரம்... வன்முறையாளர்களுடன் தொடர்பு... பாதுகாப்பு பணியிலிருந்து 12 பேர் அதிரடி நீக்கம்
வாஷிங்டன்: வன்முறையாளர்களுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைப் பாதுகாக்கும் பணியிலிருந்து 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத்தில் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாக இது பார்க்கப்படுகிறது. டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த வன்முறையால் இரண்டு காவலர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு டிரம்ப் தான் காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாதுகாப்புப் பணி
மேலும், ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், இந்த விழாவிலும் வன்முறை ஏற்படலாம் என்ற அஞ்சப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 25 ஆயிரம் தேசியப் பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாஷிங்டனில் நாளை வரை அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பணியிலிருந்து விடுவிப்பு
இந்நிலையில், வன்முறையாளர்களுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைப் பாதுகாக்கும் பணியிலிருந்து 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ராத் ஹாஃப்மேன் கூறுகையில், "அவர்களுக்கு என்ன மாதிரியான தொடர்பு இருந்தது என்பது குறித்த விசாரணைக்கே நாங்கள் செல்வதில்லை.

ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை
தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டாலே அவர்களை பணியிலிருந்து நீக்குகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் நாங்கள் எவ்வித ரிஸ்க் எடுக்கவும் தயாராக இல்லை. தற்போது 12 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பணியிலிருந்து நீக்கப்படுவதாலேயே இவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றோ வரும் காலங்களில் எந்த பணிக்கும் தகுதிபெற மாட்டார்கள் என்றோ பொருள் இல்லை. இப்போதைக்கு இவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான்" என்றார்.

கூடுதல் தகவல்கள் இல்லை
அதன்படி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இரண்டு தேசியப் பாதுகாப்புப் படையினர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நாடாளுமன்றத்தில் மற்ற பணிகளிலிருந்து 10 பேரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது என்ன பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், என்ன மாதிரியான நடவடிக்கையால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும் இவர்களின் பெயர் உள்ளிட்ட மற்ற தகவல்களையும் பகிர்ந்துகொள்ள ஜொனாதன் ராத் ஹாஃப்மேன் மறுத்துவிட்டார்.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை












Click it and Unblock the Notifications