'காபி குடிக்கிறியா'.. சிங்கத்துடன் கொஞ்சும் நபர்.. பார்த்து சூதானமா இருக்க நெட்டிசன்கள் அட்வைஸ்!
வாஷிங்டன்: வாலிபர் ஒருவர் செல்லப்பிராணிகளான பூனை, நாய்க்குட்டியை கொஞ்சுவது போல சிங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி விளையாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் 'பார்த்து சூதானமா இருக்க' அந்த நபருக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
பூனை மற்றும் நாய்கள் தான் உலகம் முழுக்க பெரும்பாலும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனைகளுடன் கொஞ்சி விளையாடுவது மற்றும் தங்கள் கட்டளைகளுக்கு கீழ் படியவைப்பது என அதனுடன் விளையாடி அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை நாம் பார்த்து இருக்கிறோம்.

செல்லப்பிராணியாக சிங்கம்
இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் சிங்கத்தை வீட்டில் செல்லப்பிராணி போல வளர்த்து அதை தனது கட்டளைக்கு படிய வைத்து ஹுமைத் அப்துல்லா என்பவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. என்ன சிங்கத்தையா? என்று வியந்து பார்ப்பது புரிகிறது. இந்தியா போன்ற பெரும்பாலான நாடுகளில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்ட விரோதம் ஆகும்.

நாய்க்குட்டியை கொஞ்சுவது போல..
எனினும் சில நாடுகளில் உரிய அனுமதியின் பேரில் சிங்கத்தை வீட்டில் வளர்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஹூமைத் அப்துல்லா என்பவர் வெள்ளை நிற சிங்கம் ஒன்றை நாய்குட்டியை போல தனது வீட்டில் வளர்த்து அதனுடன் கொஞ்சி விளையாடி அது தொடர்பான வீடியோ பதிவுகளை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார். ஹூமைத் அப்துல்லாவின் இந்த பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவுகின்றன.

மடியில் படுத்துக்கொண்டு..
'சிங்கத்துடன் சிங்கம்' என்ற கேப்ஷனுடன் ஹூமைத் அப்துல்லா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பூனைக்குட்டியை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவது போல சிங்கத்தை கட்டியணைத்து கொண்டு இருக்கிறார். அப்போது அவருடைய பிடியில் இருந்து நழுவும் சிங்கம் கர்ஜிக்கிறது. சிங்கத்தை மீண்டும் கர்ஜிக்குமாறு அவர் கூறவும் அப்படியே கட்டுப்படும் சிங்கம் மீண்டும் கர்ஜிக்கிறது.

சிங்கத்திற்கு காஃபி
இணையத்தில் வெளியான சில மணி நேரங்களில் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து பரவிக்கொண்டு இருக்கிறது. சிம்பா என்று தனது சிங்கத்திற்கு பெயர் வைத்து இருப்பதாக தெரிவித்துள்ள ஹூமைத், சிங்கத்திற்கு காஃபியும் கொடுக்கிறார். ஆனால், அது குடிக்க மறுக்கிறது. சிம்பாவுக்கு காஃபி பிடிக்கவில்லை போலும்.. மீண்டும் கர்ஜிக்கிறது. என்றும் மீண்டும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

உங்களையே சாப்பிட்டு விடும்
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கீழே தங்கள் பதிவுகளை வியந்தபடி பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், காட்டுக்கே ராஜாவாக இருந்த சிங்கத்தை நான்கு சுவற்றுக்குள் அடைத்து இருக்கிறார்களே என ஆதங்கப்படும் வகையில் பதிவிட்டு உள்ளார். மற்றொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், எப்படி பார்த்தாலும் அது வனவிலங்குதான்.. ஒரு நாள் உங்களை இந்த சிங்கம் சாப்பிட்டு விடப்போகிறது. எச்சரிக்கையாக இருங்கள் சகோதரரே.. என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications