அமெரிக்காவில் அவமானகரமான காட்சிகள்...போரிஸ் ஜான்சன் கண்டனம்...டிரம்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தபோது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரசில் அவமானகரமான காட்சிகள்" என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
கடும் வன்முறை

4 பேர் சாவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். வருகிற 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். அதில் 4 பேர் உயிரிழந்தனர்.

போரிஸ் ஜான்சன் கண்டனம்
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க காங்கிரசில் அவமானகரமான காட்சிகள்" என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். "அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை குறிக்கிறது, இப்போது அமைதியான மற்றும் ஒழுங்கான அதிகார பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம்." என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ஜெர்மனி கருத்து
டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் இறுதியாக அமெரிக்க வாக்காளர்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஜனநாயகத்தை மிதிப்பதை நிறுத்த வேண்டும். அழற்சி வார்த்தைகளிலிருந்து வன்முறை செயல்கள் வருகின்றன. ஜனநாயக நிறுவனங்களை அவமதிப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் டுவிட்டரில் தெரிவித்தார்.

நீதிபதி வேதனை
அமெரிக்காவின் இந்த சோகமான அத்தியாயத்தில், பாசிசத்தை ஆதரிப்பவர்கள் தங்கள் உண்மையான முகத்தைக் காட்டினர். இது ஜனநாயக விரோத மற்றும் ஆக்கிரமிப்பு" என்று பிரேசிலின் உச்ச நீதிமன்ற நீதிபதியும் நாட்டின் தேர்தல் நீதிமன்றத்தின் தலைவருமான லூயிஸ் ராபர்டோ பரோசோ கூறியுள்ளார். துருக்கிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த உள்நாட்டு அரசியல் நெருக்கடியை அமெரிக்கா முதிர்ச்சியுடன் சமாளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறியுளளது.

ஜனநாயகம் வேண்டும்
அமெரிக்காவில் நடந்த நிகழ்வுகளால் தனது நாடு "மிகுந்த மன உளைச்சலுடனும் வருத்தத்துடனும் உள்ளது" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ''வன்முறை ஒருபோதும் மக்களின் விருப்பத்தை மீறுவதில் வெற்றிபெறாது. அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அது அப்படியே இருக்கும்" என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அமைதி மேலோங்கும்
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் வோல்கன் போஸ்கிர், ''இந்த முக்கியமான நேரத்தில் அமெரிக்காவில் அமைதி மற்றும் ஜனநாயக செயல்முறைகளுக்கான மரியாதை மேலோங்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஜனநாயக தேர்தலின் முடிவுகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதே போல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் அமெரிக்க சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications