இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு
வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் போல்சனாரோ, இந்தியா அனுப்பி வைத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு, மிகவும் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருந்தாலும், மக்கள் சமூக விலகல் பின்பற்ற வேண்டாம், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர் போல்சோனாரோ.
இது வெறும் சளிக் காய்ச்சல் என்றும் கூறினார். மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு, இந்தியா அனுப்ப சம்மதித்தபோது, அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்று லட்சுமணனை காப்பாற்றியது போல இந்திய பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று புகழ்ந்துரைத்தார்.

பிரேசில் அதிபர்
இந்த நிலையில், கடந்த சில தினங்கள் முன்பு பிரேசில் அதிபருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல் முறையாக முகக் கவசம் அணிந்தபடி செய்தியாளர்களிடம் இந்த தகவலை அவர் கூறினார். பிறகு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

பேஸ்புக் வீடியோ
இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தபடி பேஸ்புக் லைவ் மூலம், மக்களுடன் உரையாடினார் போல்சனாரோ. தான் "மிகவும் நன்றாக" இருப்பதாக அப்போது கூறினார். மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தி வருவதாகவும், அதனால் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் கூறினார், 65 வயதான போல்சனாரோ.

டொனால்ட் ட்ரம்ப்
மலேரியாவை குணப்படுத்தும் இந்த மாத்திரை, கொரொனா சிகிச்சைக்காக சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பிரேசில் அதிபர் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்த மாத்திரை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால் அதன் செயல்திறன் இன்னும் முறையாக நிரூபிக்கப்படவில்லை.

விமர்சனம்
"நான் (ஹைட்ராக்ஸி குளோரோகுயின்) எடுத்துக்கொண்டேன், அது வேலை செய்தது, நான் நன்றாக இருக்கிறேன், கடவுளுக்கு நன்றி. அதை விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாற்று மருந்தை வழங்கட்டும்." என்று பிரேசில் அதிபர் தனது வீடியோவில் தெரிவித்தார். ஆனால் மக்கள் தாங்களாகவே இந்த மருந்தை சாப்பிட இந்த வீடியோ உத்வேகம் அளித்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
Recommended Video

பக்க விளைவுகள்
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை, இதய பலஹீனம் உள்ளிட்ட, பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ உலகம் எச்சரித்துள்ளது. எனவே, பிரேசில் அதிபரின் இந்த வீடியோ விமர்சனங்களை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications