"தீயாய் பரவும் குரங்கு அம்மை".. அவசர நிலையை அறிவித்தது கலிபோர்னியா.. தடுப்பூசி போடும் பணி தீவிரம்
வாஷிங்டன்: குரங்கு அம்மை பரவலால், அமெரிக்காவில் ஏற்கனவே 2 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3-வதாக கலிபோர்னியா மாகானத்திலும் சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு உலகளாவிய பெருந்தொற்று நோய் போல குரங்கு அம்மை பரவி வருகிறது.
குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது.

அமெரிக்காவில் குரங்கு அம்மை
இந்த சூல்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச சுகாதார அவசர நிலையை கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் அதிக அளவில் பரவியிருப்பதால் அந்நாட்டின் மாகாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவசர நிலையை அறிவித்து வருகின்றன.

கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்
ஏற்கனவே, நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்த நிலையில், தற்போது கலிபோர்னியா மாகாணமும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''குரங்கு அம்மை நாடு முழுவதும் பரவத்தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
அமெரிக்காவில் 5,800 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் ஏறத்தாழ 800 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் காரணமாக கலிபோர்னியா முழுவதும் உள்ள மக்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுவருவதாக கலிபோர்னியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

பரவல் வேகத்தை குறைக்க நடவடிக்கை
மேலும், பரிசோதனைகளை அதிகரித்து நோய் பரவலின் வேகத்தை குறைப்பதற்காக அரசு அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை 61 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் 6 முதல் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும் கலிபோர்னியா அரசு தெரிவித்துள்ளது. மே 21 ஆம் தேதி முதன் முதலாக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. மாகாணம் முழுவதும் 27 இடங்களில் பரவிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சில மகாணங்கள் சுகாதார அவசர நிலையை அறிவித்தாலும் இதுவரை நாடு முழுவதுமான ஒரு அவசர நிலையை ஜோ பைடன் நிர்வாகம் அறிவிக்கவில்லை. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications