ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ரெடி.. முதல் பரிசோதனையில் வெற்றி.. பக்கவிளைவுகள் இல்லை
வாஷிங்டன்: குழந்தை பிறப்பதை தடுக்கும் வகையில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த மாத்திரை என்பது என்ன? பரிசோதனை எந்த கட்டத்தில் உள்ளது? எப்போது நடைமுறைக்கு வரும்? பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம் நாடு உள்பட உலகம் முழுவதும் குழந்தைகள் பிறப்பை கட்டுப்படுத்த கருத்தை வசதிகள் பெண்களுக்கு தான் அதிகம் உள்ளது. கருத்தரிப்பதை தடுக்க பெண்களுக்கான மாத்திரைகள், ஊசிகள், கருத்தடை சாதனங்கள் அதிகம் உள்ளன.

இந்த விஷயத்தில் ஆண்கள் என்று வந்தால் ஆணுறை மற்றும் வாசெக்டமி (Vasectomies) அறுவை சிகிச்சைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தான் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கின.
அதன்படி ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. YCT 529 எனப்படும் இந்த மாத்திரை ஹார்மோன் ‛ப்ரீ’ மாத்திரையாகும். இது வைட்டமின் ஏ வளர்சிதை மாற்றத்தை தடுத்து ஆணின் உயிரணு உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும். இந்த மாத்திரை தற்போது முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
32 வயது முதல் 59 வயது நிரம்பிய 16 ஆண்கள் இந்த பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு மாத்திரைகள் வழங்கி முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட பரிசோதனை என்பது அந்த மாத்திரையை எடுத்து கொள்வதால் பக்கவிளைவு வருகிறதா? என்பது கண்டறிவதை அடிப்படையாக கொண்டது. அதில் மாத்திரை வெற்றி பெற்றுள்ளது. அந்த மாத்திரையை எடுத்து கொண்டால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும் மாத்திரையின் செயல்திறன், கருத்தடைக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது குறித்து இன்னும் பரிசோதிக்கப்படவில்லை. அடுத்தக்கட்டமாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பரிசோதனைகள் வெற்றியடைந்த பிறகே மாத்திரைகள் மார்க்கெட்டுக்கு வரும்.
இந்த மாத்திரை அனைத்து பரிசோதனைகளிலும் வெற்றி பெற்று விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரையாக இது இருக்கும். இந்த மாத்திரையின் பரிசோதனையின் முடிவுகள் குறித்த விபரங்கள் ஜார்னல் கம்யூனிகேஷன் மெடிஷினில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிஷினின் Endocrinologist டாக்டர் ஸ்டெஃபனி பேஜ் கூறுகையில், ‛‛ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை எடுத்து கொள்வதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை'' என்று கூறியுள்ளார்.
இந்த மாத்திரை தயாரிப்பில் அமெரிக்காவின் மினிசோட்டா பார்மசி பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது. கொலலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் யுவர்சாய்ஸ் தெரபியூடிக்ஸ் (YourChoice Therapeutics) நிறுவனம் மேற்பார்வை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications