அமெரிக்காவில் இருக்கீங்களா?.. தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்.. அமெரிக்க அரசு அறிவிப்பு
வாஷிங்டன்: கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும் அமெரிக்கர்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என ஜோ பிடன் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.41 கோடியாக உள்ளது. இங்கு 6 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாகாணங்களும் அமெரிக்க அரசும் பல வகையான கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.
தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள்..புதுபுது குழப்பங்கள்.. கிராமப்புறங்களில் உடனடி விழிப்புணர்வு தேவை
சுதந்திர தினம்
அந்த வகையில் அமெரிக்க சுதந்திர தினத்திற்கு முன்னதாக நாட்டில் உள்ள 70 சதவீத பெரியவர்களுக்கு தடுப்பூசி போட அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார். இந்த கோடை காலத்தில் கொரோனா இல்லாத அமெரிக்காவாக மாற்ற அவர் முனைப்பு காட்டி வருகிறார்.
அமெரிக்க குடிமகன்கள்
இந்த நிலையில் தடுப்பூசி நிறுவனங்களும் அமெரிக்க குடிமகன்களை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் கிப்ட் வவுச்சர், விளையாட்டுக்கான அனுமதி டிக்கெட்டுகள் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பு என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஆன்யூசெர் புஷ் நிறுவனம் அறிவித்துள்ளது.
2 மில்லியன் பேர்
கடந்த ஏப்ரலில் ஒரு நாளை 2 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் இத்தனை நாட்களாக ஒரு நாளைக்கு 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து தற்போது ஒரு நாளைக்கு 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நாள் வரை அமெரிக்க மக்கள்தொகையில் 62.8 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திட்டம்
133.6 மில்லியன் பேர் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் ஜோ பிடனின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ஆன்யூசெர் புஷ் நிறுவனம் ஜூலை 4 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம் என்பதுதான் அந்த திட்டமாகும்.