பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு.. மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்.. 100-க்கும் மேற்பட்டோர் பலி
வாஷிங்டன்: பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தென்மேற்கு பசிபிக் கடலோரத்தில் அமைந்துள்ள நாடு பப்புவா நியூ கினியா.. இந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே நிலச்சரிவில் சிக்கி தங்கள் உயிரை இழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 300 இருக்கும் என்று அருகில் உள்ள நிங்கா ரோல் கிராம மக்கள் கூறினர்.
நிலச்சரிவில் சிக்கிய இடங்களில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்களுடன் மீட்பு பணிகளை உள்ளூர் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய இடத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதோடு, பாறைகளும் மரங்களும் நிறைந்து இருப்பதால் மீட்பு பணியில் சவால் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபே தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எங்கா மாவட்ட அதிகாரிகள் மறுசீரமைப்பு பணிகளையும் தொடங்கியிருப்பதாகவும் பிரதமர் ஜேம்ஸ் மராபே தெரிவித்தார். சேதம் குறித்த முழு தகவல் கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பிறகு பலியானோர் எண்ணிக்கை பற்றிய முழுமையான விவரங்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications