மோடி - டிரம்பை எப்படி குறை சொல்லலாம்? அமெரிக்காவில் இடதுசாரிகளை இறங்கி அடித்த இத்தாலி பெண் பிரதமர்
வாஷிங்டன்: ‛'பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப் மற்றும் நான் பேசினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்கின்றனர். நீங்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் மக்கள் எங்களுக்கு தான் ஓட்டுப்போட்டு வருகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம்'' என்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி முழங்கி உள்ளார். அவரது இந்த பேச்சின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இத்தாலி பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடக்கும் CPAC 2025 மாநாட்டில் காணொலி வாயிலாகபங்கேற்று பேசினார். அப்போது தற்போதைய சூழலில் உலக நாடுகளின் அரசியல், உலக நாட்டு தலைவர்களின் மீதான வன்மம் பற்றி கவலை தெரிவித்தார்.

குறிப்பாக பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா மெலோனி உள்ளிட்டவர்களை இடதுசாரிகள் குறிவைத்து விமர்சனம் செய்வதை சுட்டிக்காட்டி அவர் வார்னிங் செய்தார். இந்த மாநாட்டில் ஜார்ஜியா மெலோனி பேசும்போது கூறியதாவது:
டொனால்ட் டிரம்ப் வெற்றியால் தற்போது இடதுசாரிகள் பதற்றத்தில் உள்ளனர். அவர் வெற்றி பெற்றதுமே இடதுசாரிகளின் வெறுப்பு என்பது வெறித்தனமாக மாறிவிட்டது. டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலே மற்றும் என்னை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கன்சர்வேட்டிவ் தலைவர்களாக (கலாசாரம், சமூக பழக்கவழக்கங்களை காக்கும் தலைவர்கள் அல்லது பழமைவாதிகள்) உள்ள இவர்களின் செல்வாக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
மேலும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் தலைவர்கள் வெற்றி மட்டும் பெறுவது இல்லை. உலகளவில் ஒன்றாக இணைந்து செயல்பட தொடங்கி உள்ளனர். 90களில் அமெரிக்க அதிபராக பில் கிளின்டன் மற்றும் பிரிட்டன் பிரதமராக டோனி பிளேயர் இருந்தபோது உலகம் முழுவதும் இடதுசாரிகளுக்கான நெட்வொர்க்கை ஏற்படுத்தினர். அவர்கள் ஸ்டேட்ஸ்மேன் என்று அழைக்கப்பட்டனர்.
ஆனால் இப்போது டொனால்ட் டிரம்ப், மெலோனி, மிலே, மோடி ஆகியோரின் பேச்சுக்களை ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் என்று சொல்கின்றனர். இது இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாட்டை தான் காட்டுகிறது. அதோடு இதனை நாங்கள் பயன்படுத்தி கொள்கிறோம். இன்னொரு நல்ல விஷயம் என்றால் இடதுசாரிகளின் பொய்களை மக்கள் நிராகரிக்கின்றனர். அவர்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் கூட மக்கள் எங்களுக்கு தான் ஓட்டளித்து வருகின்றனர். ஏனென்றால் இடதுசாரிகள் நினைப்பது போல் சாதாரண மக்கள் ஒன்றும் அப்பாவிகள் இல்லை'' என்று கூறியுள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இருவரும் நல்ல நட்பில் உள்ளனர். இதனை பலமுறை அவர் வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக நம் நாட்டின் பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணம் சென்றதே இத்தாலிக்கு தான். இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா இந்த கூட்டமைப்பில் இல்லாமல் இருந்தாலும் கூட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார்.
அதன்பிறகு அதனை ஜார்ஜியோ மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார் "மெலோடி குழுவில் இருந்து வணக்கம்" என்று கூறியிருந்தார். அதாவது இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து ‛மெலோடி டீம்' என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் அதிக கவனம் பெற்றது.
அதற்கு முன்பாக என்று பார்த்தால் கடந்த 2023ம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற COP28- உச்சி மாநாட்டின் போதும் பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி இணையத்தில் அப்போதும் டிரெண்ட் ஆகியிருந்தது. இப்படியாக பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனிக்கு நல்ல உறவு என்பது இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப் மற்றும் தன்னை இடதுசாரிகள் விமர்சித்து வருவதை ஜார்ஜியா மெலோனி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications