புத்தாண்டு இரவில் சதி? முறியடித்த அமெரிக்கா.. உலகெங்கும் முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல புகழ்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்றிரவு உலகமே 2026ஐ வரவேற்க ரெடியாக காத்திருக்கிறது. எப்போதும் உலகெங்கும் நாடுகளைக் கடந்து கொண்டாடப்படும் நாளாக இந்தப் புத்தாண்டு இருக்கிறது. இதனால் உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்தாண்டும் பல புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா தாக்குதல்
இந்தச் சூழலில் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த மர்ம நபர்கள் திட்டமிட்டிருந்தனர். இது தொடர்பாக நான்கு பேரை மோஜாவே பாலைவனத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் அரங்கேறிய இது கைது நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்தாவது நபரையும் உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள்
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பல முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்படும் மோசான நிகழ்வுகளைத் தடுக்கவே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகப் புகழ்பெற்ற சிட்னியின் வானவேடிக்கை, பாரிஸின் இசை நிகழ்ச்சிகள், டோக்கியோவின் ஷிபுயா கவுண்ட்டவுன் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோருகின்றன.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 14ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்திருந்தது. இரு தீவிரவாதிகள் அங்கிருந்த அப்பாவி மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடந்த சிட்னியின் பாண்டி கடற்கரை புத்தாண்டு நிகழ்வுகள், வானவேடிக்கை, பெரிய விருந்துகள் ரத்து செய்யப்பட்டன.
சிறப்பு நிகழ்வுகள்
பிரான்ஸின் பாரிஸ் காவல்துறை பாதுகாப்பு காரணங்களுக்காக சான்ப்ஸ்-எலிசீஸ் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது. பெருங்கூட்டங்களில் அசம்பாவிதம் நடப்பதைத் தடுக்கப் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதேநேரம் வானவேடிக்கை மற்றும் லைட் ஷோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அதிகக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, புகழ்பெற்ற ஷிபுயா நிலையம் கவுண்ட் டவுன் நிகழ்வை அதிகாரிகள் ரத்து செய்தனர். பெல்கிரேட் நகரின் அதிகாரப்பூர்வப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் செர்பியப் புத்தாண்டு கொண்டாட்டங்களும் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தடுக்கத் தொடர் விழிப்புணர்வு அவசியம் என்பதையும் இது வலியுறுத்தியது.












Click it and Unblock the Notifications