ரஷ்யா மீது பொருளாதார தடை.. கச்சா எண்ணெய் விலை உயர்வு எங்களின் முதுகை உடைக்கிறது! அமைச்சர் ஜெய்சங்கர்
வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் முதுகை உடைக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார். அப்போது கிழக்கு ஆசிய பிரச்சினைகள், உக்ரைன் போர், பரஸ்பர நலத் திட்டங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த பல மாதங்களாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம்
வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம் 2,000 டாலர்கள்தான். இதனால் எண்ணெய் விலை எங்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. எங்களின் முதுகை உடைக்கிறது. கடந்த சில மாதங்களாகவே எரிசக்தி சந்தை பெரும் அழுத்தத்தில் உள்ளது.

விலை அதிகரிப்பு
விலை அதிகரிப்பு ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறது என்றால் மறுபக்கம் அந்த எரிசக்தி கைக்கு வந்து சேருவதில் மிகவும் சிரமம் இருக்கிறது. எங்களை போன்ற வளர்ந்து வரும் நாடுகள் எரிசக்தி தேவைகளை எப்படி பூர்த்தி செய்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதம் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த மொத்த எண்ணெயில் 0.2 சதவீதம் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இருந்தது. மேற்கத்திய நாடுகளால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைள் அந்த நாட்டின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள்
மேலும் உக்ரைன் தாக்குதலை ரஷ்யா நடத்துவதை கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை குறைத்துவிட்டன என ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எஃப் 16 போர் விமானங்கள் வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் கூறுகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் போர் விமானங்கள் யாருக்கு எகிராக பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் என விமர்சித்திருந்தார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர்












Click it and Unblock the Notifications