ரஷ்யா மீது பொருளாதார தடை.. கச்சா எண்ணெய் விலை உயர்வு எங்களின் முதுகை உடைக்கிறது! அமைச்சர் ஜெய்சங்கர்
வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் முதுகை உடைக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார். அப்போது கிழக்கு ஆசிய பிரச்சினைகள், உக்ரைன் போர், பரஸ்பர நலத் திட்டங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த பல மாதங்களாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம்
வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம் 2,000 டாலர்கள்தான். இதனால் எண்ணெய் விலை எங்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. எங்களின் முதுகை உடைக்கிறது. கடந்த சில மாதங்களாகவே எரிசக்தி சந்தை பெரும் அழுத்தத்தில் உள்ளது.

விலை அதிகரிப்பு
விலை அதிகரிப்பு ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறது என்றால் மறுபக்கம் அந்த எரிசக்தி கைக்கு வந்து சேருவதில் மிகவும் சிரமம் இருக்கிறது. எங்களை போன்ற வளர்ந்து வரும் நாடுகள் எரிசக்தி தேவைகளை எப்படி பூர்த்தி செய்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதம் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த மொத்த எண்ணெயில் 0.2 சதவீதம் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இருந்தது. மேற்கத்திய நாடுகளால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைள் அந்த நாட்டின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள்
மேலும் உக்ரைன் தாக்குதலை ரஷ்யா நடத்துவதை கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை குறைத்துவிட்டன என ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எஃப் 16 போர் விமானங்கள் வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் கூறுகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் போர் விமானங்கள் யாருக்கு எகிராக பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் என விமர்சித்திருந்தார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications