அமெரிக்காவில் 2-ல் ஒரு இந்தியர்.. நிறவெறி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டில் ஒரு இந்தியர் நிறவெறி பாகுபாட்டை எதிர்கொள்வதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் நிறவெறி பாகுபாடு என்னும் கொடிய சாத்தான் நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறது. நிறவெறி காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இனவெறி, நிறவெறி, மதவெறி பாகுபாடு குறித்து அறிவதற்காக இந்திய அமெரிக்க மனப்பான்மை கணக்கெடுப்பு (ஐ.ஏ.ஏ.எஸ்) நடத்தப்பட்டது.

ஆன்லைன் மூலம் ஆய்வு
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட் ஆகியவற்றுடன் இணைந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி இறுதி காலத்தில், கொரோனா முதல் அலை பாதிப்பு ஏற்பட்ட கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இந்த ஆய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

இரண்டில் ஒரு இந்தியர்
சுமார் 1,200 இந்திய வம்சாவளியினரிடம் நிறவெறி, இனவெறி, மதவெறி பாகுபாட்டை எதிர்கொண்டீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது மொத்தம் பதிலத்தவர்களில் இரண்டில் ஒருவர் கடந்த ஆண்டில் பாகுபாட்டை எதிர் கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதில் நிறவெறிதான் அதிகம். இந்தியன்-அமெரிக்கன்' என்ற சொல் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் இது போட்டியிடும் அடையாளமாக இருப்பதாகவும் ஆய்வு முடிவு கூறின,

நிறவெறி அதிகம்
தோல் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு(நிறவெறி) காண்பது மிகவும் அதிகமாக(30%) இருந்துள்ளது. தோல் நிற அடிப்படையிலான பாகுபாட்டைத் தவிர, பல இந்திய அமெரிக்கர்கள் (18 சதவீதம்) தங்கள் பாலினம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். முஸ்லிம்கள் அதிக அளவு மத பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் (39 சதவீதம்), இந்துக்கள் (18 சதவீதம்), கிறிஸ்தவர்கள் (15 சதவீதம்) பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்
பதிலளித்தவர்கள் பலர் இந்திய பாரம்பரியம் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டதாகவும், 5 சதவீதம் பேர் சாதி அடையாளம் காரணமாக பாகுபாடு எதிர்கொண்டதாகவும் தெரிவித்தனர். இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக அமெரிக்காவில் பிறந்த இந்திய அமெரிக்கர்கள் இந்தியாவில் அல்லது வேறு எந்த நாட்டிலும் பிறந்த இந்தியர்களை விட அதிக பாகுபாட்டை எதிர் கொண்டுள்ளனர் என்பதுதான். கிரீன் கார்டு, எச் 1 பி விசா வைத்திருப்பவர்கள், மாணவர்கள் போன்றவர்கள் உள்ளிட்ட இந்திய அமெரிக்கர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டுள்ளன. பதிலளித்தவர்களில் 77 சதவீதம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications