அந்த அழகிய முகம்.. அதைத் தொட்டே ஒரு வாரமாச்சுங்க.. டிரம்புக்கு வந்த கொரோனா சோதனை!
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக முகத்தை தொட்டே ஒரு வாரம் ஆனது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் முதல் முறையாக வுகான் நகரத்திலிருந்து பரவியது. இந்த வைரஸ் நோய் வந்தால் சாதாரண சளி, காய்ச்சல், மூச்சுவிட சிரமம், கிட்னி பாதிப்பு வரை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும். இதன் மூலம் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

7ஆவது வைரஸ்
கொரோனா குடும்பத்தில் இது 7 ஆவது வைரஸ் என்றாலும் இதற்கு முன்னர் இப்படிப்பட்ட தீவிர வைரஸை பார்த்ததே இல்லை என கூறப்படுகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த நோய்க்கு 89 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

இந்தியா
இந்த நிலையில் இந்த நோய் இந்தியாவுக்கும் பரவி வருகிறது. அமெரிக்காவில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தப்பிக்க
வெள்ளை மாளிகையின் ஒருங்கிணைப்பாளர் தெபோரா பிர்ஸ் கூறுகையில், கைகளை கழுவுவதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது போல் முகத்தை கழுவுவதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றார்.

நகைச்சுவை
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் தனது முகத்தை ஒரு வார காலமாக தொடவில்லை. அதை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்றார். இவரது இந்த விஷயத்தை மிகவும் நகைச்சுவையாக கூறியிருந்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications