டிரம்ப் போட்ட இரண்டு டுவிட்டும் பொய்யானது.. முதல் முறையாக அடையாளப்படுத்திய டுவிட்டர்
வாஷிங்டன்: முதல் முறையாக, ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க அதிபர் வெளியிட்ட டொனால்ட் டிரம்பின் இரண்டு டுவிட்களை பொய்யான தகவல்கள் என்று அடையாளப்படுத்தியுள்ளது.
அஞ்சல் வாக்குகளை பற்றி இந்த இரண்டு டுவிட்களும் மக்கள் தவறாக வழிநடத்தும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டின உண்மை தன்மையை முதுல்முறையாக டுவிட்டர் சரிபார்த்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை இரண்டு அடுத்தடுத்த டுவிட்களை வெளியிட்டிருந்தார். ட்விட்களில் டிரம்ப், மெயில்-இன் வாக்குச்சீட்டுகள் மோசடிக்கு வழிவகுக்கும் என்றும், அஞ்சல் பெட்டிகள் கொள்ளையடிக்கப்படும், வாக்குச்சீட்டுகள் போலியானவை மற்றும் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டு மோசடியாக கையொப்பமிடப்படும். கலிபோர்னியா ஆளுநர் மில்லியன் கணக்கான மக்களுக்கு வாக்குச்சீட்டை அனுப்புகிறார் என்று கூறியிருந்தார்.

தவறாக வழிநடத்தும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டஇரண்டு ட்விட்களும் பொய்யான தகவல் உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. மக்கனை டிரம்பின் டுவிட் தவறாக வழிநடத்தும் என்றும் கூறிய நிறுவனம் இரண்டு டுவிட்டையும் பொய் டுவிட் என்று அடையாளப்படுத்தியுள்ளது. மெயில்-இன் வாக்களிப்பு குறித்து தவறான அறிக்கைகள் "தவறாக வழிநடத்தும்" என்று கூறியுள்ளது.

அஞ்சல்-வாக்குகள்
ட்விட்டர் முதல் முறையாக அதிபர் டிரம்பை உண்மையாக சரிபார்த்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக அஞ்சல்-வாக்குகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் கலிபோர்னியா முக்கிய கவனம் செலுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவால் மெயில்-இன் வாக்களிப்பை விரிவுபடுத்துவதற்கான மாநில நடவடிக்கைகள் குறித்து வழக்குத் தொடர்ந்தார்.

தவறான தகவல்
இந்நிலையில் தான் டிரம்ப் கோபப்பட்டு டுவிட் பதிவினை வெளியிட்டிருந்தார். அவை தான் டுவிட்டரால் உண்மை சரிபார்க்கப்பட்டு பொய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ட்விட்டர் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, ட்வீட்டுகள் "வாக்களிக்கும் செயல்முறைகள் பற்றிய தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் அஞ்சல்-வாக்குச் சீட்டுகளில் கூடுதல் சூழலை வழங்குவதற்காக அவை பெயரிடப்பட்டுள்ளன." என்றார்.

டுவிட்டர் மீது பாய்ந்தார்
தனது டுவிட்டை பொய் என்று டுவிட்டர் கூறியதால் கடும் கோபம் அடைந்த டிரம்ப், டிவிட்டர் நிறுவனம் மீது பாய்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2020 அதிபர் தேர்தலில் ட்விட்டர் இப்போது தலையிடுகிறது. சி.என்.என் மற்றும் அமேசான் வாஷிங்டன் போஸ்ட் போன்றவை உண்மைச் சரிபார்ப்பின் அடிப்படை என்று கூறி, ஊழல் மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும் மெயில்-இன் வாக்குச்சீட்டில் எனது அறிக்கை தவறானது என்று சொல்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications