அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி! வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டார்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலகெங்கும் ஓமிக்ரான் கொரோனா காரணமாகக் கடந்த ஆண்டு இறுதியில் மிகப் பெரிய அளவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் தினசரி பாதிப்பு பெரியளவில் உயர்ந்தது.

இருப்பினும், நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை போல இல்லாமல் லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்தியது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும் உயிரிழப்பு அதிகரிக்கவில்லை.
அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஊரடங்கு குறித்த அச்சமும் எழுந்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 79 வயதாகும் பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இரண்டு டோஸ் வேக்சின் மற்றும் இரு முறை பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுள்ள அவர், இப்போது வெள்ளை மாளிகையில் தனிமையில் இருப்பதாகவும் அப்படியே அவர் தனது பணியைத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அதிபர் ஜோ பைடன் ஃபைசரின் கொரோனா மாத்திரையான பாக்ஸ்லோவைட் எடுக்கத் தொடங்கி உள்ளதாகவும் வெள்ளை மாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் விரைவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய வேண்டும் எனப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications