நான் தோத்துட்டேன்னு யார் சொன்னது.. பிடன் ஆட்சிக்கு வழிவிட்ட பின்பும்.. முரண்டு பிடிக்கும் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்காமல் டிரம்ப் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறார். பிடன் தேர்தலில் மோசடி செய்து விட்டதாக அவர் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 290 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று, அடுத்த அதிபராக தேர்வாகி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 232 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று, தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
வரும் ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பிடன் பதவி ஏற்க உள்ளார்.

டிரம்ப் பிடிவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்பை தோற்கடித்து, ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றார். பல்வேறு மாகாணங்களில் தோல்வி அடைந்த டிரம்ப், ,தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதம் சாதித்து வருகிறார். நாங்கள் நிறைய இடங்களில் வெற்றி பெற்றோம், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என அவர் குற்றம் சாட்டி வருகிறார். டிரம்பின் வறட்டு கவுரவத்தால் வெற்றி பெற்று பல வாரங்கள் கடந்த போதிலும் ஜோ பிடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

பைடனுக்கு நம்பிக்கை
இரண்டு நாட்களுக்கு முன்பு மனசு மாறிய டிரம்ப், ஜோ பிடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் பிடனுக்கு நம்பிக்கை பிறந்தது. இந்த நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அந்த மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை பொறுத்து கொள்ள முடியாத டிரம்ப், மீண்டும் பழைய பல்லவியை பாட ஆரம்பித்தார்.

மோசடி செய்துள்ளார்
பென்சில்வேனியாவின் கெட்டிஸ் பார்க் என்ற இடத்தில் குடியரசு கட்சியின் சட்ட ஆலோசகர்கள் அவசரமாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் பேசிய டிரம்ப், இது நாங்கள் எளிதாக வென்ற தேர்தலாகும், நாங்கள் நிறைய இடங்களில் வென்றுள்ளோம் என தெரிவித்தார். தனது வழக்கறிஞர் ஜென்னா எல்லிஸின் மைக்ரோஃபோன் வைத்திருந்த தொலைபேசி மூலம் சுமார் 11 நிமிடங்கள் அவர் பேசினார். தேர்தலில் பிடன் மோசடி செய்துள்ளார். எனவே தேர்தலைத் திரும்ப பெற வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.

முரண்டு பிடிக்கிறார்
அதிபர் தேர்தலில் எந்த மோசடியும் நடைபெறவில்லை என மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் கூறியுள்ளனர். தேசிய பொதுசேவை நிர்வாக குழுவும் பிடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதம் தெரிவித்தது. இது தொடர்பாக பல்வேறு போராட்டம் நடத்தியும், சட்ட போராட்டம் நடத்தியும் டிரம்பால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் அவர் தோல்வியை ஏற்காமல் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications